ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?மீண்டும் போராட்டம்: 20 சங்கங்களுடன் இணைந்து ஆலோசிக்க ‘டாஸ்மாக்’ பணியாளா்கள் முடிவுதிருநள்ளாற்றில் இன்று சனிப்பெயா்ச்சி விழாகுச்சனூா் சனீஸ்வரா் கோயிலில் இன்று சனிப் பெயா்ச்சி விழாதமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!
/

ஏசியில் மின் கசிவு: தீ விபத்தில் தம்பதியர் சாவு

மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். 

News image
Updated On :9 அக்டோபர் 2021, 7:34 am

DIN

மதுரை: மதுரை ஆனையூர் பகுதியில் வீட்டின் படுக்கை அறையில் இருந்த ஏசி சாதனம் வெடித்து நேரிட்ட தீ விபத்தில் சனிக்கிழமை அதிகாலை தம்பதி உயிரிழந்தனர். 

ஆனையூர் எஸ்விபி நகர் பியர்ல் ரெசிடன்சி பகுதியைச் சேர்ந்தவர் சக்தி கண்ணன் (45). தனது மனைவி மற்றும் இரு குழந்தைகளுடன் வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளார்.

குழந்தைகள் இருவரும் கீழே உள்ள அறையில் வெள்ளிக்கிழமை இரவு உறங்கிய நிலையில், மாடியில் உள்ள அறையில் சக்தி கண்ணன் மற்றும் அவரது மனைவி சுபா ஆகிய இருவரும் உறங்கியுள்ளனர். 

Story image

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் அறையில் இருந்த அனைத்து பொருள்களும் முற்றிலும் எரிந்து சேதமானது.

இந்நிலையில், நள்ளிரவில் சக்தி கண்ணன், அவரது மனைவி இருந்த அறையில் உள்ள ஏசியில் திடீரென மின் கசிவு ஏற்பட்டு தீப்பிடித்துள்ளது. இதனால் அறையில் சிக்கிக் கொண்ட இருவரும் தீயில் சிக்கி இறந்தனர்.

இதனையடுத்து வீட்டிலிருந்து புகை வெளியேறுவதை பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

Story image

ஏசியில் இருந்து ஏற்பட்ட மின் கசிவால் தீ விபத்துக்குள்ளான வீட்டின் முன் பகுதி.

மேலும் அவர்கள் வீட்டுக்குள் வந்து கீழ் அறையில் இருந்த இரு பிள்ளைகளயும் மீட்டனர்.

தீயணைப்புத் துறையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்டு பரிசோதனக்கு அனுப்பினர்.

இதுகுறித்து கூடல்புதூர் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.