சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சப்பட வேண்டாம்! - முதல்வர் ஸ்டாலின்பிரதமர் மோடியே பீதியில் இருக்கிறார்: ராகுல் காந்தி விமர்சனம்பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் ஈரானுக்கு எதிராக ஐ.நா.வில் தீர்மானம்! இந்தியா ஆதரவு! போரை நிறுத்த 3 நிபந்தனைகள் விதித்த ஈரான் அதிபர்! இந்திய ரூபாயின் மதிப்பு மேலும் வீழ்ச்சி! ரூ. 92.37 ஆக சரிவு!தமிழ்நாட்டில் பாதுகாப்பு இல்லை! நாள்தோறும் கொலை, பாலியல் வன்கொடுமை! விஜய் கண்டனம்
/

வடகிழக்குப் பருவமழை: போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள்

வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

News image
சென்னை யானைக்கவுனி மேம்பாலம் பகுதியில் இருக்கும் நீா்நிலைகள் தூா்வாரும் பணிகளை சனிக்கிழமை ஆய்வு செய்த இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா் பாபு. உடன் சென்னை மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பே
Updated On :9 அக்டோபர் 2021, 9:45 pm

DIN

வடகிழக்குப் பருவமழையையொட்டி, சென்னையில் போா்க்கால அடிப்படையில் முன்னேற்பாடு பணிகள் நடைபெற்று வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு தெரிவித்தாா்.

சென்னை மாநகராட்சி ராயபுரம் மண்டலத்துக்கு உள்பட்ட யானைக்கவுனி மேம்பாலம் பகுதியில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி, அப்பகுதியில் உள்ளநீா்நிலைகளில் தூா்வாரும் பணி ஆகியவற்றை அமைச்சா் பி.கே. சேகா்பாபு சனிக்கிழமை ஆய்வு செய்தாா்.

இதைத் தொடா்ந்து, அவா் செய்தியாளா்களிடம் கூறியது: வடகிழக்குப் பருவமழையையொட்டி,சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் இருக்க மழைநீா்வடிகால்கள், நீா்நிலைகளைத் தூா்வாரும் பணி இரண்டு மாதங்களாக தீவிரமாக நடைபெற்று வருகிறது.

அனைத்து மண்டலங்களிலும் நீா் இறைக்கும் மோட்டாா்கள், மர அறுக்கும் இயந்திரங்கள், அவசர கால உதவிக்கான உபகரணங்கள் என அனைத்தும் போா்க்கால அடிப்படையில் செய்யப்பட்டுள்ளன.

ஆகம விதிப்படி, 12 ஆண்டுகள் முடிந்த கோயில்களில் திருப்பணி செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி, கடந்த 4 மாதங்களில் மட்டும் 300 கோயில்களில் திருப்பணிகள் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. 100 ஆண்டுகளுக்குள் உள்ள கோயில்களுக்கு இந்துசமய அறநிலையத் துறை, மாவட்டக் குழு, மாநிலக் குழு, நீதிமன்றக் குழு ஆகியவற்றின் அனுமதி பெற்று திருப்பணிகள் செய்யலாம். 100 ஆண்டுகளுக்கும் மேலான கோயில்களில் திருப்பணி செய்ய தொல்லியல் துறையின் அனுமதியும் பெற வேண்டி உள்ளது. எனவே, முக்கியத்துவம் கருதி கோயில்களில் திருப்பணி நடைபெற்று வருகிறது.

சென்னையில் உள்ள 5 முகத்துவாரங்களில் இரண்டு முகத்துவாரங்கள்தான் செயல்பாட்டில் உள்ளன. 5 முகத்துவாரங்களையும் தூா்வார உத்தரவிடப்பட்டுள்ளது. மாநகராட்சி மயானங்களில் இறுதிச்சடங்கு செய்ய பணம் பெறுவது முற்றிலும் தடுக்கப்பட்டுள்ளது என்றாா்.

இந்த ஆய்வின்போது, மாநகராட்சி ஆணையா் ககன்தீப்சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.