விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

News image
உதகையில் பலத்த மழை: அரசு மருத்துவமனை தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது
Updated On :11 அக்டோபர் 2021, 11:29 am

DIN

நீலகிரி மாவட்டம் உதகையில் பலத்த மழைக்கு உதகை அரசு மருத்துவமனையின் வெளி நோயாளி பிரிவின் 50 அடி உயரமுள்ள தடுப்புச் சுவர் இடிந்து விழுந்தது.

நல்வாய்ப்பாக சுவர் இடிந்து விழும் போது அங்கு யாரும் இல்லாததால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதனால் இவ்வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம்  உதகை, குன்னூரில் காலை முதல் பலத்த மழை பெய்து வந்தது. இதன் காரணமாக  அரசு மருத்துவமனையின் வெளி நோயாளிப் பிரிவு கட்டடத்தின் 50 அடி தடுப்புச் சுவர்  இடிந்து விழுந்தது.

இதேப் போன்று குன்னூர் மேட்டுப்பாளையம் சாலையில் குரும்பாடி என்ற இடத்தில் மண்சரிவு ஏற்பட்டது. இதனை ஜேசிபி இயந்திரம் கொண்டு நெடுஞ்சாலை மற்றும் உதகை நகராட்சி ஊழியர்கள் அகற்றினர்.  இதன் காரணமாக சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.