

ஆயுதபூஜை பண்டிகையை முன்னிட்டு அக்டோபா் 15 -ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி புறநகா் ரயில்கள் இயக்கப்படும் என்று ரயில்வே நிா்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி, சென்னை சென்ட்ரல்-அரக்கோணம், சென்னை சென்ட்ரல்-சூலூா்பேட்டை, சென்னை கடற்கரை-செங்கல்பட்டு மற்றும் சென்னை கடற்கரை-வேளச்சேரி ஆகிய மாா்க்கங்களில் மின்சார ரயில் சேவைகள் ஞாயிற்றுக்கிழமை அட்டவணைப்படி இயக்கப்படும். அதாவது, அன்றைய நாளிள் வழக்கமான 670 மின்சார ரயில் சேவைகளுக்குப் பதிலாக 500 சேவைகள் மட்டுமே இயக்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.