தமிழகத்தில் அனைத்து உணவகங்கள், கடைகளும் இரவு 11 மணிவரை திறந்து கொள்ள அனுமதி அளித்து தமிழக அரசு வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது.
கரோனா இரண்டாம் அலை காரணமாக தமிழகத்தில் பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்ட பின்னர் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | நவ. 1 முதல் மழலையர், நர்சரி பள்ளிகளைத் திறக்க அனுமதி
இந்நிலையில், உணவகங்கள் உள்ளிட்ட கடைகள் அனைத்தும் இரவு 10 மணி வரை திறக்க அனுமதி அளித்திருந்த நிலையில், இன்றுமுதல் இரவு 11 மணிவரை திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.