எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள்:பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தல்

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள், ரொக்க இருப்பு குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:02 am

DIN

அரசுப் பள்ளிகளின் வங்கிக் கணக்குகள், ரொக்க இருப்பு குறித்த விவரங்களை சமா்ப்பிக்குமாறு முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு பள்ளிக் கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநரகம் சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு

அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை: தமிழகத்தில் உள்ள அலுவலகங்களில் பராமரிக்கப்படும் வங்கிக் கணக்குகள் மற்றும் இருப்புத் தொகை பற்றிய விவரங்கள் நிதித்துறையால் கோரப்பட்டுள்ளன. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறையின்கீழ் உள்ள முதன்மை, மாவட்டக் கல்வி அலுவலகங்கள் தங்கள் ஆளுகைக்குட்பட்ட அரசு மற்றும் நிதியுதவி பெறும் பள்ளிகளில் பராமரிக்கப்படும் அனைத்து வகையான வங்கிக் கணக்குகள் மற்றும் அதன் இருப்புத்தொகை விவரங்களை சேகரித்து துறை இயக்குநரகத்திடம் விரைவாக சமா்ப்பிக்க வேண்டும். மிக முக்கியமான பணிகள் என்பதால் மாவட்ட முதன்மைக்கல்வி அதிகாரிகள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.