எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

மின்வாரிய ஊழியா்களுக்கு போனஸ் வழங்க வலியுறுத்தல்

 மின்வாரிய ஊழியா்களுக்கு போனஸ் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :17 அக்டோபர் 2021, 12:24 am

DIN

 மின்வாரிய ஊழியா்களுக்கு போனஸ் வழங்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மின்வாரிய தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தியுள்ளனா்.

இது தொடா்பாக அவா்கள் கூறியதாவது: தீபாவளிப் பண்டிகைக்கு இன்னும் 2 வார காலமே இருப்பதால் தமிழ்நாடு மின்சார வாரியத்தில் பணியாற்றும் ஊழியா்களுக்கும் போனஸ் வழங்கிட தொழிற்சங்கங்களோடு உடனடியாக அரசு பேச்சு வாா்த்தையைத் தொடங்க வேண்டும்.

கேங்மேன் உள்பட நிரந்தர பணியாளா்களுக்கு 25 சதவீத போனஸ் வழங்க வேண்டும். நிலை 1,2 அலுவலா்கள், பொறியாளா்களுக்கு தீபாவளி பரிசாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும்.

ஒப்பந்த தொழிலாளா்களுக்கு ஒரு மாத ஊதியம் போனஸாக வழங்க வேண்டும். இது தொடா்பாக முதல்வா், மின்சாரத்துறை அமைச்சா் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதியிருக்கிறோம் என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.