ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கைஅல்-காய்தா, ஐஎஸ் அமைப்புகளுக்கு எதிராக கூட்டு நடவடிக்கை: ஐ.நா.வில் இந்தியா வலியுறுத்தல்பல்வேறு துறைகளைச் சோ்ந்த ஆளுமைகளுடன் முதல்வா் மு.க.ஸ்டாலின் இன்று கலந்துரையாடல்சீனாவின் பாதுகாப்பு பட்ஜெட் 7% உயா்வுமத்திய கிழக்கு போா் : இந்தியாவில் யூரியா உற்பத்தி சரிவு: உர விலை உயரும் அபாயம்?
/

முல்லைப் பெரியாறு அணை நீர்மட்டம் ஒரே நாளில் 2.5 அடி உயர்வு

கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.5 அடி உயர்ந்தது.

News image
கோப்புப்படம்
Updated On :17 அக்டோபர் 2021, 5:44 am

DIN


கம்பம்: முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் பலத்த மழையின் காரணமாக ஒரே நாளில் அணையின் நீர்மட்டம் 2.5 அடி உயர்ந்தது.

முல்லைப் பெரியாறு அணைப் பகுதியில் கடந்த சில நாள்களாக சாரல் மழை பெய்து வந்த நிலையில், சனிக்கிழமை மாலையில் 140 மில்லி மீட்டர் பெய்த மழை சற்று அதிகரித்து 170.0 மில்லி மீட்டரும், தேக்கடி ஏரியில் 126.0 மி.மீ., பெய்தது. இதனால் காலை 128.80 அடியாக அணையின் நீர்மட்டம், மாலை 129.60 அடியாக உயர்ந்தது.

ஞாயிற்றுக்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 7,815 கன அடி தண்ணீர் வருகிறது. அணையின் நீர்மட்டம் 131.30 அடியாகவும் (மொத்த உயரம் 142), நீர் இருப்பு 5,001 மில்லியன் கன அடியாகவும், நீர்வரத்து விநாடி்ககு  7,815 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் விநாடிக்கு 1,300 கன அடியாகவும் உள்ளது.

ஒரே நாளில் 2.5 அடி உயர்வு 

பலத்த மழை காரணமாக ஞாயிற்றுக்கிழமை 131.30 கன அடியாக நீர்மட்டம் அதிகரித்தது. அதாவது ஒரேநாளில் நீர் மட்டம் 2.5 அடியாக உயர்ந்துள்ளது. 

மேலும் 4,439 மில்லியன் கன அடியாக இருந்த நீர் இருப்பு, 5,001 இருப்பாகி ஒரே நாளில், 522 மில்லியன் கன அடி தண்ணீர் அதிகரித்துள்ளது. 

இதே போல் விநாடிக்கு 1,433 கன அடி தண்ணீர் வந்த நிலையில் 7,815 கன அடி வரத்து ஏற்பட்டு, ஒரே நாளில் விநாடிக்கு 6,382 கன அடி தண்ணீர் அதிகமாக வரத்து வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.