கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!இங்கிலாந்துக்கு எதிராக ரன் குவிக்க நியூஸி. திணறல் - 160 ரன்கள் இலக்கு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்! கச்சத்தீவு தேவாலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!கோவை நீலாம்பூரில் முதல்வர் மு. க . ஸ்டாலின் பிரசாரம்நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

திருக்கோளிலி நுண்ணூட்ட சத்து பூங்கா தொடக்க விழா

திருக்குவளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திருக்கோளிலி நுண்ணூட்ட சத்து பூங்கா தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
திருக்கோளிலி நுண்ணூட்ட சத்து பூங்காவை தொடங்கி வைத்த நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ்.
Updated On :28 ஜனவரி 2024, 4:25 am

DIN


திருக்குவளை வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் திருக்கோளிலி நுண்ணூட்ட சத்து பூங்கா தொடக்க விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

நாகப்பட்டினம் மாவட்டம், தொடங்கப்பட்டு 30ஆண்டுகள் நிறைவுயையொட்டி, அரசுத்துறை சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது.

இதன் ஒருபகுதியாக  திருக்குவளை வட்டாட்சியர் அலுவலகத்தில் 16,000 சதுர அடி நிலப்பரப்பில், திருக்குவளை வட்ட அலுவலக சரகத்திற்கு உள்பட்ட அனைத்து அரசு அலுவலர்கள், பனங்குடி சி.பி.சி.எல்.நிறுவனம்,நாகை ஏடிஜே தர்மாம்பாள் பாலிடெக்னிக் கல்லூரி,ஈசனூர் ஆரிஃபா பாலிடெக்னிக் கல்லூரி ஆகியோரின் நிதி பங்களிப்போடு நுண்ணூட்ட சத்து பூங்கா அமைக்கும் பணி நடைபெற்றது.

இதில் ஊட்டச்சத்து , இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் சத்துக்கள் நிறைந்த நெல்லி, மாதுளை, எலுமிச்சை, சீத்தாப்பழம், கொடுக்காபுளி,கொய்யா, சப்போட்டா, நார்த்தை உள்ளிட்ட மரக்கன்றுகள் சிறு குழந்தைகள் மற்றும் எதிர்கால தலைமுறையினர்களுக்கு பயனளிக்கும் வகையில், இயற்கை உரமிட்டு நடவு செய்யப்பட்டது.

இந்நிகழ்வினை நாகை மாவட்ட ஆட்சியர் அ.அருண்தம்புராஜ் பங்கேற்று தொடங்கி வைத்தார்.

வேதாரண்யம் கோட்டாட்சியர் து.துரைராஜ், திருக்குவளை வட்டாட்சியர் கு.சிவகுமார், தலைமையிடத்து துணை வட்டாட்சியர் இரா.திலகா, திருக்குவளை ஊராட்சிமன்ற தலைவர் இல.பழனியப்பன், வனம் தன்னார்வ அமைப்பின் நிறுவனர் வனம்.கலைமணி, திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக பொறியியல் புல முதல்வர் எம். துரைராசன், குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் எஸ்.சித்ரா, தனி வட்டாட்சியர் கே. கார்த்திகேயன்,மண்டல துணை வட்டாட்சியர் வடிவழகன், தோட்டக்கலை அலுவலர் ரெ.ஜெயகுமார் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.