தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சித்த மருத்துவர், மருந்தாளுனர் நியமிக்கப்படுவார்களா?

சீர்காழியில் தலைமை  அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 1,500 புறநோயாளிகள், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

News image

சீர்காழி அரசு மருத்துவமனைக்கு சித்த மருத்துவர், மருந்தாளுனர் நியமிக்கப்படுவார்களா?

Updated On :21 அக்டோபர் 2021, 10:08 am

DIN

சீர்காழி: சீர்காழியில் தலைமை  அரசு மருத்துவமனை இயங்கி வருகிறது. இங்கு நாள்தோறும் சுமார் 1,500 புறநோயாளிகள், 150க்கும் மேற்பட்ட உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

இம்மருத்துவமனையில் வளாகத்தின் ஒரு பகுதியில் சித்த மருத்துவ பிரிவு செயல்பட்டு வருகிறது. இதில் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம், தோல் வியாதி உள்ளிட்ட பல்வேறு வியாதிகளுக்கும் சிகிச்சை பெற நாள்தோறும் சுமார் 300க்கும் மேற்பட்ட மக்கள் வந்து செல்கின்றனர். அதோடு இங்கு வழங்கப்படும் கபசுர குடிநீர் பொடி, நிலவேம்பு கசாயம் பொடி உள்ளிட்ட சித்த மருத்துவம் மூலிகை மருந்துகளை பெறுவதற்கும் பொதுமக்கள் வருகை புரிகின்றனர். 

Story image

காலை 7 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 3 மணி முதல் 5 மணி வரையிலும் சித்த மருத்துவமனை இயங்கி வருகிறது. இந்நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக சித்த மருத்துவ பிரிவில்  பணியாற்றி வந்த சித்த மருத்துவர் பணி மாறுதலில் சென்றார். அதற்குப் பிறகு இங்கு நிரந்தர சித்த மருத்துவர் மற்றும் மருந்தாளுநர் நியமிக்கப்படாமல் உள்ளது.

அருகிலுள்ள நல்லூர், குன்னம் ஆகிய அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் சித்த மருத்துவர் மற்றும் மருந்தாளுனர் வாரத்திற்கு 4 முறை என கூடுதல் பணியில் சீர்காழி அரசு மருத்துமனை சித்த மருத்துவ பிரிவில் பணியாற்றிச் செல்கின்றனர். ஆகையால் சீர்காழி அரசு மருத்துவமனை சித்த மருத்துவப் பிரிவில்  நிரந்தர சித்த மருத்துவர், மற்றும் மருந்தாளுனரை நியமிக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.