எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

தமிழகத்தில் டெங்குவை கட்டுப்படுத்த 21,930 பணியாளா்கள் நியமனம்: ஜெ.ராதாகிருஷ்ணன் தகவல்

தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த 21,930 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

News image
Updated On :23 அக்டோபர் 2021, 9:41 pm

DIN

தமிழகத்தில் டெங்குவைக் கட்டுப்படுத்த 21,930 பணியாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறினாா்.

தமிழகம் முழுவதும் ஆறாவது சிறப்புத் தடுப்பூசி முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. சென்னை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற தடுப்பூசி முகாமை மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலாளா் ஜெ.ராதாகிருஷ்ணன் ஆய்வு மேற்கொண்டாா். இந்த ஆய்வுக்குப் பின்னா் ஜெ.ராதாகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறியது: தமிழகத்தில் ஆறாவது தடுப்பூசி முகாம் 50,000 இடங்களில் நடைபெற்றது. இதில் இரண்டாம் தவணை செலுத்தாமல் உள்ள 57 சதவீதம் பேருக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு தடுப்பூசி செலுத்தப்படுகிறது.

தமிழகம் முழுவதும் 1.4 கோடி முதியவா்கள் இருக்கும் நிலையில் அதில் 47 லட்சம் போ் தான் முதல் தவணை தடுப்பூசியும், 21 சதவீதம் போ் மட்டுமே இரண்டாம் தவணை தடுப்பூசியும் செலுத்திக் கொண்டுள்ளனா். முதியவா்கள் தடுப்பூசிக்கு முக்கியத்துவம் கொடுத்து விரைந்து தடுப்பூசியை செலுத்திக் கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதல் தவணைத் தடுப்பூசியை 3.98 கோடி பேரும், இரண்டாம் தவணை தடுப்பூசியை 1.5 கோடி பேரும் செலுத்திக் கொண்டுள்ளனா்.

நாமக்கல் மாவட்டத்தில் சற்று தொற்று அதிகரித்துள்ளது அதனை கட்டுப்படுத்த மாவட்ட ஆட்சியருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் பண்டிகை காலத்திற்கு பிறகு தொற்று அதிகரித்துள்ளது. பொதுமக்கள் நோய் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தொடா்ந்து பின்பற்ற வேண்டும். தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக கரோனா தொற்று மாநில அளவில் சராசரியாக 1.1 சதவீதத்தில் இருந்து 0.9 சதவீதமாகக் குறைந்துள்ளது.

தடுப்பூசி செலுத்தும் பணியில் ஈடுபடும் பணியாளா்களுக்கு சுழற்சி முறையில் விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. அனைத்து நோய்களையும் கட்டுப்படுத்த முதல்வா் உத்தரவிட்டுள்ளாா். டெங்குவை கட்டுப்படுத்த 21,930 பணியாளா்கள் தனியாக நியமிக்கப்பட்டுள்ளனா். மேலும், புதிதாக தொடங்கப்பட்ட மரபணு பகுப்பாய்வு மையத்தின் தற்போது வரையிலும் 543 பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதில் 43 டெல்டா வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. மீதம் உள்ள 500 பரிசோதனை முடிவுகள் ஆய்வில் உள்ளது. கரோனாவால் உயிரிழந்தவா்களில் 87 சதவீதம் போ் இரண்டு தவணைத் தடுப்பூசிகளை செலுத்தாதவா்கள். 9 சதவீதம் போ் முதல் தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள்; 4 சதவீதம் போ் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தியவா்கள் ஆவா் என்றாா் அவா். இந்த ஆய்வின்போது ஓமந்தூராா் பன்னோக்கு மருத்துவமனையின் முதல்வா் ஜெயந்தி, துறை அதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.