நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.
நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்
நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை: தொடக்கி வைத்தார் ஸ்டாலின்

தமிழகத்தில் உள்ள நியாயவிலைக் கடைகளில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தொடக்கி வைத்தார் முதல்வர் ஸ்டாலின்.

நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டம் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்துள்ளவாறு, பனைத் தொழிலில் ஈடுபட்டு வரும் பனை விவசாயிகளின் வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் பொருட்டு “கற்பகம்” என்ற பெயரில் நியாய விலை கடைகள் மூலம் பனை வெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தை தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

பல்பொருள் அங்காடிகளில் கரும்பனை எனும் பெயரில் பனைவெல்லம் விற்பனை செய்யும் திட்டத்தையும் முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட புதிய கைபேசி செயலி வணிகக் களத்தில் ஏற்பட்டு வரும் அபரிமிதமான மின்னணு தொழில் நுட்ப வளர்ச்சியினை கருத்தில் கொண்டு இளம் தலைமுறையினர் எளிதில் இணையதள சேவையினை பயன்படுத்தி தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரிய பொருட்களை கொள்முதல் செய்திட டிஎன்காதி (tnkhadi) எனும் செல்லிடப்பேசி செயலியை முதல்வர் ஸ்டாலின் அறிமுகப்படுத்தினார்.

பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையம் இராமநாதபுரம் மாவட்டம் கடலாடி ஊராட்சி ஒன்றியம் சாயல்குடியில் “இராமநாதபுரம் – சிவகங்கை” மாவட்ட பனை வெல்ல கூட்டுறவு விற்பனை சம்மேளனத்திற்கு சொந்தமான இடத்தில், பனைத் தொழிலை மேம்படுத்திடும் நோக்கில் மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியின் கீழ் ரூ.53.50 இலட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள பனை வெல்லம் மற்றும் பனைப் பொருட்கள் தயாரிக்கும் பயிற்சி நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்கள். 

துணிநூல் துறை என்ற புதிய துறை உருவாக்கம் 
2021-22ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையில் தெரிவித்தவாறு, கைத்தறி மற்றும் துணிநூல் துறையினைப் பிரித்து, தனியாக துணிநூல் துறை என்ற துறை உருவாக்கப்பட்டு, முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்.

சிறந்த நெசவாளர்கள் விருது 
புதிய மற்றும் கண்கவர் வடிவமைப்புகளை புகுத்துதல் மற்றும் தற்போதைய சந்தையில் அதிக தேவையுள்ள பட்டு, கைத்தறி இரகங்களை உற்பத்தி செய்து கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்தின் முன்னேற்றத்திற்கு உறுதுணையாக இருக்கும் கைத்தறி நெசவாளர்களை ஊக்குவிக்க தமிழ்நாடு அரசால் சிறந்த நெசவாளர் விருது ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் கீழ், மாநில அளவிலான தேர்வுக்குழு மூலம் தெரிவு செய்யப்பட்ட 6 கைத்தறி நெசவாளர்களுக்கு முதல் பரிசாக 1 இலட்சம் ரூபாய், இரண்டாம் பரிசாக 75 ஆயிரம் ரூபாய் மற்றும் மூன்றாம் பரிசாக 50 ஆயிரம் ரூபாய் முறையே பட்டு மற்றும் பருத்தி ஆகிய இரண்டு இரகங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான பட்டு இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு கே.ஜி. கண்ணன், இரண்டாம் பரிசு வி. சரவணன், மூன்றாம் பரிசு கே. சுமதி, பருத்தி இரகத்திற்கான சிறந்த நெசவாளர் விருதிற்கான முதல் பரிசு இ.ஆர். நாகலம்மாள், இரண்டாம் பரிசுஎஸ். ரவி, மூன்றாம் பரிசு என். நெடுஞ்சேரலாதன் ஆகியோருக்கு முதல்வர் இன்று பரிசுத் தொகைக்கான காசோலைகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி, பாராட்டினார்.

சிறந்த ஏற்றுமதியாளர் விருது
கைத்தறி துணிகளின் ஏற்றுமதியை ஊக்குவிப்பதற்கும், அயல்நாட்டு சந்தையில் கைத்தறி துணி விற்பனையினை மேம்படுத்தவும் தமிழ்நாடு அரசு சிறந்த கைத்தறி துணி ஏற்றுமதியாளர்களுக்கு பரிசு வழங்கும் திட்டத்தை 1975 ஆம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது.

அந்த வகையில், 2020-21ஆம் ஆண்டிற்கான சிறந்த ஏற்றுமதியாளர் விருதிற்கான முதல் பரிசு சென்னை - திருவாளர் அம்பாடி எண்டர்பிரைசஸ் லிமிடெட் நிறுவனத்திற்கும், இரண்டாம் பரிசு ஈரோடு – சென்னிமலை தொழிலியல் கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கத்திற்கும் மற்றும் மூன்றாம் பரிசு ஈரோடு – திருவாளர் ஃபைவ் பி வென்சர் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்திற்கும் முதல்வர்  வழங்கி, பாராட்டினார்.

காஞ்சிபுரம் - தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் பங்கு ஈவுத் தொகை காஞ்சிபுரத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு சரிகை ஆலை, பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்குத் தேவைப்படும் சரிகையினை உற்பத்தி செய்யும் நோக்கத்துடன் 1971 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1974-ஆம் ஆண்டு முதல் வணிக ரீதியிலான உற்பத்தியை மேற்கொண்டு வருகிறது . இந்நிறுவனம் ஐஎஸ்ஓ:9001:2015 தரச்சான்று பெற்ற, மாநில அரசு சார்ந்த ஒரு பொதுத்துறை நிறுவனமாகும்.

இந்நிறுவனம் பட்டு கைத்தறி நெசவாளர் கூட்டுறவு சங்கங்களுக்கு தேவைப்படும் 60 சதவீத சரிகையினை உற்பத்தி செய்து நியாயமான விலையில் விநியோகம் செய்து வருகின்றது.

காஞ்சிபுரம் - தமிழ்நாடு சரிகை ஆலை நிறுவனத்தின் 2019-2020 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் ஈவுத் தொகையான 20 இலட்சம் ரூபாய்க்கான காசோலையை முதல்வரிடம் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர்  ஆர்.காந்தி அவர்கள் வழங்கினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com