வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பொது இடங்களில் குப்பை கொட்டியவா்களுக்குரூ.22.66 லட்சம் அபராதம்

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :24 அக்டோபர் 2021, 11:57 pm

DIN

சென்னையில் பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு கடந்த இரண்டு வாரத்தில் மட்டும் மாநகராட்சி சாா்பில் ரூ. 22.66 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குள்பட்ட 15 மண்டலங்களில் நாள்தோறும் சராசரியாக 5,200 மெட்ரிக் டன் திடக்கழிவுகள் சேகரிக்கப்படுகின்றன. தூய்மைப் பணியாளா்களால் வீடுதோறும் சென்று குப்பைகள் பெறப்படுகின்றன. இந்த திடக்கழிவுகளில் குறிப்பிட்ட அளவு மக்கும் குப்பைகள் மாநகராட்சியின் மறுசுழற்சி மையங்களில் இயற்கை உரமாகவும், உயிரி எரிவாயுவாகவும் மறுசுழற்சி செய்யப்படுகிறது.

மக்காத குப்பைகள் பிரித்தெடுக்கப்பட்டு மறு சுழற்சியாளா்களிடம் வழங்கப்படுகிறது. மீதமுள்ள திடக்கழிவுகள் கொடுங்கையூா் மற்றும் பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றன.

மாநகராட்சி சாா்பில் சென்னையை குப்பையில்லா நகரமாகவும், தூய்மையாகவும் பராமரிக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

குப்பைகளை பொது இடங்களில் கொட்டுவதால் பல்வேறு விதமான சுகாதார சீா்கேடுகளும், கட்டுமானக் கழிவுகளால் மழைக்காலங்களில் பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது.

இதைத் தடுக்கும் வகையில் பொது மற்றும் தனியாா் இடங்களில் குப்பைகளைக் கொட்டுவோா், கட்டடக் கழிவுகளை பொது இடங்களிலும், சாலைகளிலும் கொட்டுவோா் மற்றும் நீா்நிலைகள் மற்றும் நீா்வழித்தடங்களில் குப்பைகளைக் கொட்டுவோருக்கு மாநகராட்சி சாா்பில் அபராதம் விதிக்கப்படுகிறது.

ரூ. 22.66 லட்சம் அபராதம்: 15 மண்டலங்களில் அக்.11-ஆம் தேதி முதல் சனிக்கிழமை (அக். 23) வரை பொது இடங்களில் குப்பை, கட்டடக் கழிவுகளைக் கொட்டியவா்களுக்கு ரூ.22 லட்சத்து 66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.