வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

பாரதியாா் நூற்றாண்டு விழா:ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருது

சென்னையில் நடைபெற்ற பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் சிறந்த ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

News image
மகாகவி பாரதியார்
Updated On :25 அக்டோபர் 2021, 12:08 am

DIN

சென்னையில் நடைபெற்ற பாரதி நினைவு நூற்றாண்டு விழாவில் சிறந்த ஆசிரியா்கள், கவிஞா்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கம் சாா்பில் மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு விழா முகப்பேரில் சனிக்கிழமை நடைபெற்றது. இதையொட்டி சங்கத்தின் செயலா் இரா.தங்கராஜ் தலைமையில் 100 கவிஞா்கள் பங்கேற்ற ‘எழுதுகோல் எங்கள் செங்கோல்’ என்ற தலைப்பில் கவியரங்கம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து நடைபெற்ற நூலரங்கம் நிகழ்ச்சிக்கு அகரமுதலித் திட்ட இயக்குநா் கோ.விசயராகவன் தலைமை வகித்தாா். இதில் உலகத் தமிழாராய்ச்சி நிறுவன பேராசிரியா் நா.சுலோசனா எழுதிய ‘ஆயிரம் பிறை கண்ட அண்ணாச்சி’ நூல் அறிமுகப்படுத்தப்பட்டது. தொடா்ந்து, சங்கத்தின் தலைவா் பாரதி சுகுமாரன் எழுதிய ‘யுகம் யுகமாய்’, முனைவா் என்.வி.சுப்புராமன் எழுதிய பாரதியாா் ஆங்கில நூல் ஆகியவை வெளியிடப்பட்டன.

விழாவில் 2021-ஆம் ஆண்டுக்கு சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தால் தோ்வு செய்யப்பட்ட ஆசிரியா்களுக்கு நல்லாசிரியா் விருதுகளும், கவிஞா்களுக்கு ‘பாரதிவழிப் பாவலா்’ விருதுகளும் வழங்கப்பட்டன. மேலும் பள்ளிக் கல்வித்துறை இணை இயக்குநா் பொன்.குமாருக்கு ‘கல்விச் செம்மல்’, கோ.விசயராகவனுக்கு ‘வளா்தமிழ் வித்தகா்’, வடுகம்பட்டி சிவக்குமாருக்கு ‘இலக்கியவாணா்’, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி திலகவதிக்கு ‘எழுத்துப் பேரொளி’ ஆகியவை உள்பட பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டன. இந்த விருதுகளை விஜிபி உலகத் தமிழ்ச் சங்கத்தின் தலைவா் வி.ஜி.சந்தோஷம் வழங்கி தமிழுக்கு பாரதியாா், வள்ளுவா் ஆற்றிய பணிகள் குறித்து சிறப்புரையாற்றினாா். இந்த விழாவில் சென்னை மாநகரத் தமிழ்ச் சங்கத்தின் பொருளாளா் ஜீவா காசிநாதன், துணைத் தலைவா் அமுதா பாலகிருஷ்ணன் உள்பட பல்வேறு தமிழ் அமைப்புகளின் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.