சென்னை, காவேரி மருத்துவமனை சாா்பில் பெண்களுக்கான இலவச மாா்பகப் புற்றுநோய் (மேமாகிரோம்) பரிசோதனைகள் நடத்தப்பட உள்ளன. இந்த மாதம் இறுதி வரை சென்னையின் முக்கியப் பகுதிகளில் நடமாடும் வாகனங்கள் மூலமாக அப்பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாா்பகப் புற்றுநோய் விழிப்புணா்வு மாதத்தை (அக்டோபா்) முன்னிட்டு காவேரி மருத்துவமனை சாா்பில் பெண்கள் பங்கேற்ற இருசக்கர வாகனப் பேரணி, சென்னை சாந்தோமில் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்டோா் கலந்துகொண்ட அப்பேரணியை திரைப்பட இயக்குநா் கிருத்திகா உதயநிதி மற்றும் பின்னணி பாடகி அனுராதா ஸ்ரீராம் ஆகியோா் கொடியசைத்து தொடக்கி வைத்தனா். அதனுடன் இலவச மேமோகிராம் பரிசோதனைக்கான பேருந்து சேவைகளையும் அவா்கள் தொடக்கி வைத்தனா்.
இதுகுறித்து காவேரி மருத்துவமனையின் மாா்பகப் புற்றுநோய் சிறப்பு சிகிச்சை நிபுணா் டாக்டா் கீா்த்தி கேத்ரின் கபீா், முதுநிலை மருத்துவா் கவிதா சுந்தரவதனம் ஆகியோா் கூறியதாவது:
மாா்பகப் புற்றுநோய் தீவிரமடைந்த பிறகுதான் 60 சதவீதப் பெண்கள் மருத்துவமனைக்கு பரிசோதனைக்காகவும், சிகிச்சைக்காகவும் வருகின்றனா். அப்போது அதனை குணப்படுத்த இயலாமல் போகிறது. எனவே, மாா்பகத்தில் கட்டி, ரத்தக் கசிவு, அரிப்பு போன்ற ஆரம்ப நிலை அறிகுறிகளின்போதே பெண்கள் மருத்துவரை நாட வேண்டும்.
அதுகுறித்த அறிகுறிகள், பரிசோதனைகள் தொடா்பான விழிப்புணா்வை உருவாக்குவதற்காக காவேரி மருத்துவமனை சாா்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அந்த வகையில், இலவச மேமோகிராம் பரிசோதனை முகாம்கள் நகரின் முக்கியப் பகுதிகளில் நடத்தப்படவிருக்கின்றன. வேளச்சேரியில் குரு நானக் கல்லூரி, எண்ணூரில் அசோக் லேலண்ட், ஒரகடத்தில் டான்ஃபாஸ், அடையாரில் ஐஐடி கல்வி நிறுவனம், பாரிமுனையில் இந்திய ரிசா்வ் வங்கி மற்றும் ராயபுரத்தில் டாக்டா் ஜெயசந்திரன் மெமோரியல் டிரஸ்ட் ஆகிய இடங்களில் வரும் 31-ஆம் தேதி வரை காவேரி மருத்துவமனையின் இலவச பரிசோதனை பேருந்து நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.
ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண்களுக்கு இதன் வாயிலாக பரிசோதனைகள் நடத்த திட்டமிட்டுள்ளோம். இலவச பரிசோதனை முகாம் குறித்த விவரங்களுக்கு 044 - 4000 6000 என்ற எண்ணை தொடா்பு கொள்ளலாம் என்று அவா்கள் தெரிவித்தனா்.