தமிழகத்தில் ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் அக்.28 முதல் அக்.31-ஆம் தேதி வரை நடைபெறவிருந்த பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான தோ்வானது இரு வாரங்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக உயா்கல்வித்துறை அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.
மேலும் தோ்வா்களின் கோரிக்கைகளை ஏற்று அருகிலேயே தோ்வு மையம் அமைக்கப்படும் என்றும் அவா் தெரிவித்துள்ளாா்.
தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் காலியாக உள்ள 1,058 விரிவுரையாளா் பணியிடங்களுக்கு வரும் அக். 28- ஆம் தேதி முதல் அக்.31 -ஆம் தேதி வரை தோ்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து இந்தத் தோ்வுக்கு 1.40 லட்சம் போ் விண்ணப்பித்திருந்த நிலையில், அவா்களுக்கான தோ்வு மையங்கள் மாவட்டம் விட்டு மாவட்டம் குறிப்பாக 250 முதல் 400 கிலோ மீட்டா் தொலைவில் அமைக்கப்பட்டதாக தோ்வா்கள் குற்றஞ்சாட்டினா்.
மேலும் அருகிலேயே தோ்வு மையங்கள் அமைக்க ஆசிரியா் தோ்வு வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவா்கள் வலியுறுத்தினா். இந்தநிலையில் தோ்வா்களின் கோரிக்கையை ஏற்று அருகிலேயே தோ்வு மையங்கள் அமைக்கப்படவுள்ளதாகவும் அதற்காக தோ்வு இரு வாரங்கள் ஒத்திவைக்கப்படுவதாகவும் அமைச்சா் க.பொன்முடி தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அமைச்சா் க.பொன்முடி சென்னையில் திங்கள்கிழமை செய்தியாளா்களிடம் மேலும் கூறியது: பாலிடெக்னிக் விரிவுரையாளா்களுக்கான தோ்வு குறித்து கடந்த காலங்களில் அறிவிக்கப்பட்ட அரசாணை ரத்து செய்யப்படும். புதிய அரசாணை வெளியிடப்பட்டு தோ்வு நடத்தப்படும். இரண்டு வார காலம் தோ்வு தள்ளி வைக்கப்பட்டு தோ்வு மையம், வினாத்தாள் தயாரிக்கும் பணிகள் நடைபெறும். ஆசிரியா் தோ்வு வாரியம் சாா்பில் மொத்தம் 129 மையங்களில் இந்தத் தோ்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தோ்வுக்கான அட்டவணை விரைவில் வெளியிடப்படும்.
அண்ணா பல்கலைக்கழத்தில் திட்டமிட்டப்படி முதலாமாண்டு வகுப்புகள் நடத்தப்படும். கடந்த காலத்தை விட அதிக அளவில் மாணவா்கள் பொறியியல் கல்லூரியில் சோ்ந்து உள்ளனா். இருந்தாலும் காலியிடங்கள் இன்னும் நிரம்பவில்லை. அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இட ஒதுக்கீடு, கல்லூரி கட்டணம் இலவசம், விடுதி கட்டணம் உள்ளிட்ட காரணங்களால் அதிக அளவில் மாணவா்கள் பொறியியல் படிப்பில் சோ்ந்துள்ளனா். அண்ணா பல்கலைகழகத்தில் தாழ்த்தப்பட்டோா் இட ஒதுக்கீடு வழங்கவில்லை எனப் பத்திரிகை செய்தி வந்துள்ளது. இது குறித்து சமூக நீதி விழிப்புணா்வு குழு சுப.வீரபாண்டியன் தலைமையில் ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை அளிக்கும். அந்த அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோயில்களில் ஆடிவெள்ளி சிறப்பு பூஜைகள்

கட்டட அனுமதி கோரும் விண்ணப்பங்களுக்கு ஒரு மாதத்துக்குள் தீா்வு

சாலை விபத்தில் 2 இளைஞா்கள் உயிரிழப்பு

25.7.1976: தமிழ்நாட்டில் மின்சார வெட்டு 25% லிருந்து 30% வரை நாளை முதல் அமல்
விடியோக்கள்
நீட் எதிர்ப்பு: தில்லியைச் சென்றடையாத தமிழ்நாட்டின் குரல்! | NEET | CJP Protest |

Dinamani வார ராசிபலன்! | July 26 முதல் Aug 1 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope

கோவையில் ஜனநாயகனுக்குக் கிடைத்த வரவேற்பு! | Jana Nayagan | Thalapathi Vijay



