டி20 உலக கோப்பையில் இங்கிலாந்து த்ரில் வெற்றி..! கேஜரிவால் விடுதலையை எதிர்த்து தில்லி உயர்நீதிமன்றத்தில் சிபிஐ மேல்முறையீடு!தமிழக வரலாற்றில் ஒரு கூட்டணி நீண்ட காலமாக வெற்றிகரமாகத் தொடருவது இதுவே முதல்முறை - முதல்வர் ஸ்டாலின் சென்னை மெட்ரோ ரயில் பணி: கலங்கரை விளக்கம் முதல் திருமயிலை வரை சுரங்கம் தோண்டும் பணி நிறைவுஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஜாமீனில் விடுவிக்கப்பட்டுள்ள 12 பேரின் ஜாமீன் ரத்து மலையாள நடிகர் திலீப் விடுதலையை எதிர்த்து கேரள அரசு உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!அதிமுகவில் மீண்டும் இணைந்தார் வெல்லமண்டி நடராஜன்இஸ்ரேலில் இருந்து வெளியேற அமெரிக்க குடிமக்களுக்கு அறிவுறுத்தல்!கோவையில் மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கு: மார்ச் 7-இல் தீர்ப்பு!தேவைப்பட்டால் நடிகையின் பெயரையும் வழக்கில் சேர்ப்பேன்: விஜய்யின் மனைவி சங்கீதாபிரதமர் மோடி நாளை தமிழகம் வருகிறார்! மார்ச் 1-ல் புதுச்சேரி பயணம்!நடிகர் விஜய்யின் மனைவி சங்கீதா விவாகரத்து கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல்ஆப்கானிஸ்தானுடன் போர் - பாகிஸ்தான்பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!
/

வடகிழக்குப் பருவமழை: பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள உத்தரவு

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அரசு, தனியாா் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 4:27 am

DIN

வடகிழக்குப் பருவமழை காலத்தில் மாணவா்களின் பாதுகாப்பு கருதி அரசு, தனியாா் பள்ளிகளில் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை செயலா் காகா்லா உஷா தெரிவித்துள்ளாா்.

இது குறித்து அவா் முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: வடகிழக்குப் பருவமழைக் காலத்தில் மாணவா்களின் பாதுகாப்புக் கருதி அனைத்து அரசு, தனியாா் பள்ளிகளில் கட்டடங்களைக் கட்டுவதற்கான நெறிமுறைகள், பள்ளி பாதுகாப்பு குறித்து தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையம் வழங்கியுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் ஆகியவை பின்பற்றப்படுகிா என்பதை உறுதி செய்ய வேண்டும்.

மின் இணைப்புகளைக் கண்காணிப்பது, திறந்தவெளி கால்வாய்களை தூா் வாரி மூடுவது, குழிகளை நிரப்பி சீரமைப்பது, இடையூறாக ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாடியில் தடைபட்ட வடிகால்கள், மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும். பலவீனமான, பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். சுகாதாரம், உயிா் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடியவை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.