மின் இணைப்புகளைக் கண்காணிப்பது, திறந்தவெளி கால்வாய்களை தூா் வாரி மூடுவது, குழிகளை நிரப்பி சீரமைப்பது, இடையூறாக ஆபத்தான நிலையில் உள்ள மரக்கிளைகளை வெட்டி அகற்றுவது போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். மாடியில் தடைபட்ட வடிகால்கள், மாடிப்படிகளை சுத்தம் செய்ய வேண்டும். பலவீனமான, பழுதடைந்த கட்டடங்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாக தவிா்க்க வேண்டும். சுகாதாரம், உயிா் பாதுகாப்பிற்கு செய்ய வேண்டியவை, செய்யக் கூடியவை ஆகியவை குறித்து மாணவா்களுக்கு தெரிவிக்க வேண்டும். கரோனா நோய்த்தடுப்பு வழிகாட்டுதல்களை தவறாது பின்பற்ற வேண்டும்.