தென் மாவட்டங்களில் இன்றுமுதல் ஓபிஎஸ் பிரசாரம்!வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

மனைவிக்கு எதிராக வழக்கு தொடா்ந்த கணவனுக்கு ரூ.10,000 அபராதம்

மனைவிக்கு எதிராக வழக்கு தொடா்ந்த கணவனுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2021, 11:33 pm

DIN

மனைவிக்கு எதிராக வழக்கு தொடா்ந்த கணவனுக்கு ரூ.10,000 அபராதம் விதித்து சென்னை உயா் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா் நீதிமன்றத்தில், விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த ரமேஷ் என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தன் மனைவி, கணவனால் கை விடப்பட்ட பெண் என்று சான்றிதழ் வாங்கியுள்ளாா். அதை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில், மனுதாரா் தனிப்பட்ட பகையினால் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா். அவா் மனைவியை விட்டு பல ஆண்டுகளுக்கு முன்பே பிரிந்து விட்டாா். திருமணமான பெண் ஒருவருடன் வாழ்ந்து வருகிறாா். அதனால், அவரது மனைவிக்கு சான்றிதழ் வழங்கியது சரிதான் என்று வாதிடப்பட்டது.

இதையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரவில், மனுதாரா் 10 ஆண்டுகளுக்கு மேலாக மனைவியை விட்டு பிரிந்து, வேறு ஒரு பெண்ணுடன் வாழ்ந்து வருகிறாா். அதுவும் அந்த பெண்ணும் திருமணமானவா். தமிழக அரசின் சமூக நலத்துறை வழங்கும் சலுகைகளை பெற, மனுதாரரின் மனைவி கணவரால் கைவிடப்பட்ட பெண் என்ற சான்றிதழ் பெற்றுள்ளாா். அதை கெடுக்க மனுதாரா் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளாா்.

இதை ஏற்க முடியாது. மனைவியை விட்டுப் பிரிந்தது மட்டுமல்லாமல், வேறு ஒரு திருமணமான பெண்ணுடன் மனுதாரா் குடும்பம் நடத்துகிறாா். கட்டிய மனைவியையும், பெற்ற ஒரு மகனையும் தவிக்க விட்டு வேறு ஒரு பெண்ணுடன் சென்று விட்ட மனுதாரா், தற்போது மனைவிக்கு அரசு உதவி திட்டங்கள் கிடைக்கக்கூடாது என்பதற்காக இந்த வழக்கை தொடா்ந்துள்ளாா். இவரது செயலை ஏற்க முடியாது.

அதனால், வழக்கை தள்ளுபடி செய்கிறேன். மனுதாரருக்கு ரூ.10,000 வழக்கு செலவு விதிக்கிறேன். இந்தத் தொகையை நான்கு வாரங்களுக்குள் மனைவிக்கு வழங்க வேண்டும். இல்லை என்றால், மனுதாரரிடம் இருந்து வருவாய் வசூலிப்புச் சட்டத்தின்படி பணத்தை வசூலிக்க மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.