வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் முக்கிய அறிவிப்புகள்
தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.


சென்னை: தமிழக சட்டப்பேரவையில் இன்று வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் மானியக் கோரிக்கை மீதான அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையின் சார்பில் அமைச்சர் சு. முத்துசாமி 30 புதிய அறிவிப்புகளை வெளியிட்டார்.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் பொதுமக்கள் வாங்கத்தக்க விலையில் வீடுகள் வழங்கிடும் அரசின் முயற்சியை நிறைவேற்றும் வகையில், சுயநிதித் திட்டத்தின் கீழ் பாடிக்குப்பம் (155 அடுக்குமாடி குடியிருப்புகள்), அயனாவரம் (216 அடுக்குமாடி குடியிருப்புகள்), ஈரோடு (108 அடுக்குமாடி குடியிருப்புகள்) கட்டப்படும்.
தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், பொருளாதாரத்தில் நலிவுற்ற மற்றும் குறைந்த வருவாய் / மத்திய வருவாய் பிரிவுகளில் வீடு வாங்குவோரின் பொருளாதார அழுத்தத்தைக் குறைக்கும் வகையில் தவணை முறை திட்டத்தை மீண்டும் அறிமுகப்படுத்தும்.
கோயம்பேடு மொத்த விற்பனை வளாகத்தை ரூ.20 கோடி செலவில் மேம்படுத்த நடவடிக்கை.
பழைய மகாபலிபுரம் சாலையையும், கிழக்கு கடற்கரை சாலையையும் இணைக்க பக்கிங்காம் கால்வாய் மீது சுமார் ரூ.180 கோடி செலவில் உயர்மட்ட சுழற்சாலை வகை மேம்பாலம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...