தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது பாஜகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை இல்லை; வதந்திகளை நம்ப வேண்டாம்! - தவெகஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்! அவர் சொன்ன ரகசியம்!சிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்! கதை என்ன?2026ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள்! வெற்றியாளர்கள் முழு விவரம்!! தங்கம், வெள்ளி விலை மீண்டும் குறைவுமீண்டும் சென்னை திரும்பிய துபை விமானம் மேற்கு வங்கத்தில் தலைமைச்செயலாளர் மாற்றம்! கட்டாக் மருத்துவமனையில் பயங்கர தீ விபத்து: 10 நோயாளிகள் பலி சென்னை மாதவரத்தில் என்கவுன்டரில் ரௌடி சுட்டுக்கொலை!
/

கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: ஆறுதல் கூறிய சசிகலா 

முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த நிலையில், பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

News image
கண் கலங்கிய ஓ. பன்னீர்செல்வம்: ஆறுதல் கூறிய சசிகலா
Updated On :1 செப்டம்பர் 2021, 9:16 am

DIN


சென்னை: முன்னாள் முதல்வரும், அதிமுக ஒருங்கிணைப்பாளருமான  ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி மரணமடைந்த நிலையில், பெருங்குடி தனியார் மருத்துவமனைக்கு வருகை தந்த சசிகலா, அவருக்கு நேரில் ஆறுதல் கூறினார்.

தனியார் மருத்துவமனையிலிருந்த ஓ. பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சசிகலா தனது ஆறுதலைக் கூறினார். மனைவி மறைவு குறித்து சசிகலாவிடம் கூறும்போது, கண்கலங்கிய ஓ. பன்னீர்செல்வத்தின் கையைப் பிடித்து சசிகலா ஆறுதல் கூறினார்.

தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஓ. பன்னீர்செல்வத்தின் மனைவி விஜயலட்சுமி உடல்நலக் குறைவு காரணமாக இன்று காலை மரணமடைந்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு விஜயலட்சுமிக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டு சென்னையை அடுத்த பெருங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று காலை அவர் மாரடைப்பால் மரணமடைந்தார்.

அவரது உடலுக்கு தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின்,  அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் பலரும் நேரில் வந்து அஞ்சலி செலுத்தி, ஓ. பன்னீர்செல்வத்துக்கு ஆறுதல் கூறினர்.

இந்த நிலையில், விஜயலட்சுமியின்  உடல் மருத்துவமனையிலிருந்து ஆம்புலன்ஸ் மூலம் சொந்த ஊரான தேனிக்குக் கொண்டு செல்லப்பட்டது.

முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் ஆறுதல் கூற மருத்துவமனைக்கு வந்து கொண்டிருப்பதால், ஓ. பன்னீர்செல்வம் மற்றும் அவரது மகன் உள்ளிட்டோர் தனியார் மருத்துவமனை அறையில் உள்ளனர். பன்னீர்செல்வத்தை நேரில் சந்தித்த சசிகலா, மனைவி மறைவுக்கு ஆறுதல் கூறியபோது, அவரும் கண்கலங்கினார்.

தனது மனைவிக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவு மற்றும் அதற்கு அளிக்கப்பட்டு வந்த சிகிச்சைகள் குறித்து சசிகலாவிடம், பன்னீர்செல்வம் விளக்கிக் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.