மாநிலங்களவைத் தேர்தல்: திமுகவின் திருச்சி சிவா, ரவீந்திரன் வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை உறுப்பினராகிறார் நிதீஷ் குமார்! முதல்வர் பதவியிலிருந்து விலகல்!மாநிலங்களவைத் தேர்தல்: அதிமுகவின் தம்பிதுரை வேட்புமனு தாக்கல்!மாநிலங்களவை தேர்தல்: அன்புமணி வேட்புமனுத் தாக்கல்!தேமுதிக மாநிலங்களவை வேட்பாளர் எல்.கே. சுதீஷ்!இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! தவெகவை காட்டி கூடுதல் தொகுதிகள் பெற்ற காங்கிரஸ்! செங்கோட்டையன் காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்!
/

வேதாரண்யம் பகுதியில் கொட்டித் தீர்த்த  மழை!

நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேதாரண்யத்தில் 12.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

News image
வயல்களில் தேங்கியுள்ள மழை நீர்
Updated On :3 செப்டம்பர் 2021, 5:11 am

DIN

வேதாரண்யம்: நாகை மாவட்டம்,வேதாரண்யம் பகுதியில் வியாழக்கிழமை இரவு இடியுடன் கூடிய மழை கொட்டித் தீர்த்தது. வேதாரண்யத்தில் 12.5 மி.மீ. மழை பெய்துள்ளது.

Story image

பஞ்சநதிக்குளம் ஊராட்சியில் நெல் விதைப்புக்கு ஆயத்தமான வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் .

தமிழகத்தில் வளிமண்டல சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, நாகை மாவட்டத்தில் வியாழக்கிழமை இரவு முதல் (செப்.3) இடி, மின்னலுடன் பரவலாக மழை கொட்டித் தீர்த்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீா் குளம்போல தேங்கியது. 

Story image


ஞாயிறுசந்தை-பழனியப்பா சாலைக்கு செல்வதற்கு பாதையாக பயன்படும் வாய்க்காலில் பெருக்கெடுத்து ஓடும் மழை நீரில் இருச்சக்கர வாகணத்தில் பயணிக்கும் பெண்.

வேதாரண்யம்  நகரப் பகுதியை விட கருப்பம்புலம், ஆயக்காரன்புலம், குரவப்புலம் சுற்றுப் பகுதியில் கனமழையாக இருந்தது. வயல்களில் மழை நீர் பெருக்கெடுத்தது.

வேதாரண்யத்தில் 31. 2 மி.மீட்டரும், தலைஞாயிறில் 11 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.