3 மாதங்களில் போதைப்பொருள்களை ஒழிப்போம் : எடப்பாடி பழனிசாமிபெட்ரோல், டீசல், எல்பிஜி விலையேற்றம் இல்லை: மத்திய அரசுஷெல் நிறுவன பெட்ரோல் ரூ. 7, டீசல் ரூ. 25 அதிரடி விலையேற்றம்!பிரிட்டன் தலைமையில் ஹோர்முஸ் நீரிணை பாதுகாப்பு உச்சி மாநாடுசேலம் மாவட்டம் எடப்பாடி பழனிசாமியின் கோட்டையாகவே இருக்கிறதா? காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் அதிருப்தி? தேர்தல் பொறுப்பிலிருந்து விலகினார் மாணிக்கம் தாகூர்!விஜய்க்கு பாதுகாப்பு இல்லை; மத்திய அமைச்சர் அமித் ஷாவிடம் தவெக புகார்! 4 தொகுதிகளிலும் உதயசூரியன் சின்னத்தில் மதிமுக போட்டி! புதுவை விஜய் பிரசாரத்துக்கு 19 இடங்களில் அனுமதி மறுப்பு! அமெரிக்க, இஸ்ரேல் இலக்குகளை குறிவைத்து ஈரான் கடும் தாக்குதல்
/

நாமக்கல்: 10-ஆம் வகுப்பு மாணவிக்கு கரோனா தொற்று  உறுதி

நாமக்கல் அருகே மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

News image
Updated On :3 செப்டம்பர் 2021, 5:44 am

DIN

நாமக்கல்: நாமக்கல் அருகே மாணிக்கம் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவி ஒருவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தன. நோய்த்தொற்று குறைய தொடங்கியதையடுத்து கடந்த புதன்கிழமை அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள் திறக்கப்பட்டன. 9 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவ மாணவியர் பள்ளிக்கு வருகை புரிந்தனர். 

இந்நிலையில், நாமக்கல் மாவட்டத்தில் கடந்த இரு நாள்களில் எவ்வித நோய் தோற்றும் மாணவர்களுக்கு இல்லாத நிலையில், வெள்ளிக்கிழமை நாமக்கல் அருகே மாணிக்கம்பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளி பத்தாம் வகுப்பு மாணவி ஒருவருக்கு தொற்று உறுதி செயப்பட்டுள்ளது. 

இதனையடுத்து அவருக்கு அதற்கான மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் பள்ளிகளில் உள்ள அனைத்து ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளும் பணி நடைபெற்று வருகிறது. 

மாணவி தொற்று பாதிப்புக்கு உள்ளான தகவலால் சக மாணவிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.