நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

அரசியல், மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தடை நீட்டிப்பு: முதல்வர்

​தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.

News image

கோப்புப்படம்

Updated On :9 செப்டம்பர் 2021, 3:16 pm

DIN


தமிழகத்தில் திருவிழாக்கள், அரசியல், சமூகம் மற்றும் மதம் சார்ந்த கூட்டங்களுக்கு ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள தடை அக்டோபர் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் வியாழக்கிழமை அறிவித்தார்.

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் முக்கிய அம்சங்கள்:

  • பொதுமக்கள் நலன் கருதி, அதிகப்படியான பொதுமக்கள் கூடும் நிகழ்வுகளான திருவிழாக்கள், அரசியல், சமூகம் சார்ந்த மதம் சார்ந்த கூட்டங்களுக்குத் தற்போது உள்ள தடை அக்டோபர் 31 வரை நீட்டிக்கப்படுகிறது.
  • பள்ளி, கல்லூரி வளாகங்களில் அனைத்து நோய்பரவல் தடுப்பு நடவடிக்கைகளையும் தொடர்ந்து மேற்கொள்ளுமாறு உள்ளாட்சி பொறுப்பாளர்கள், மருத்துவத் துறை மற்றும் பள்ளிக் கல்வித் துறை அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
  • கரோனா நோய்த் தொற்று பரவலைக் கட்டுப்படுத்தவும், மூன்றாம் அலை ஏற்படுவதைத் தடுக்கும் வகையிலும், பொதுமக்கள் பண்டிகைகளைத் தங்கள் இல்லங்களிலேயே கொண்டாடுமாறும் பொதுப் போக்குவரத்தினை அவசியத்திற்காக மட்டும் பயன்படுத்துமாறும் கூட்டம் கூடும் இடங்களுக்கோ, நிகழ்வுகளுக்கோ செல்வதை முற்றிலும் தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்கிறேன்.
  • தமிழ்நாட்டில் தடுப்பூசி செலுத்த தகுதியுள்ள நபர்களில் சுமார் 12 சதவிகிதம் நபர்களுக்கு இரண்டு தவணை தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன. 45 சதவிகித நபர்களுக்கு ஒரு தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
  • தினந்தோறும் சுமார் மூன்று லட்சம் தடுப்பூசிகள் என்ற அளவில் செலுத்தப்பட்டு வந்தவை, தற்போது சுமார் ஐந்து லட்சமாக அதிகரிக்கப்பட்டு தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.


முதல்வர் அறிவிப்பை முழுமையாகப் படிக்க:
இங்கே க்ளிக் செய்யவும்.. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.