விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

100% கரோனா தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சிக்கு மாவட்ட ஆட்சியர் பாராட்டு

பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதை பாராட்டி மாவட்ட ஆட்சியர் சான்றிதழ் வழங்கினார். 

News image
Updated On :9 செப்டம்பர் 2021, 9:10 am

DIN

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவீதம் பேருக்கு கரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளதைப் பாராட்டி ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்திடம் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் பாராட்டு சான்றிதழ், நினைவுப் பரிசளித்தார்.

கும்மிடிப்பூண்டி அடுத்த பல்லவாடா ஊராட்சியில் கரோனா தடுப்பூசி போடும் பணியை ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வம் ஊக்குவித்து, பொதுமக்களுக்கு தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வந்தார்.

இதனைத் தொடர்ந்து பல்லவாடா ஊராட்சியில் தொடர்ந்து தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வந்த நிலையில், ஊராட்சியைச் சேர்ந்த 18 வயதிற்கு மேற்பட்ட மக்கள் அதிக அளவு தடுப்பூசி போடத் துவங்கினர்.

இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட பல்லவாடா ஊராட்சியில் உள்ள 37 ஊராட்சி தலைவர்களுக்கு பாராட்டி நற்சான்றிதழ், நினைவு பரிசு வழங்கும் நிகழ்வு திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையிலும், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் வருண்குமார் முன்னிலையிலும் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட ஆட்சியர் பல்லவாடா ஊராட்சியில் 18 வயதிற்கு மேற்பட்ட 100 சதவிதத்தினர் கரோனா தடுப்பூசி போட்டதற்காக ஊராட்சி மன்றத் தலைவர் பி.லட்சுமி பன்னீர்செல்வத்தை பாராட்டி பரிசளித்தார். இந்த நிகழ்வில் கும்மிடிப்பூண்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வாசுதேவன், நடராஜன் ஆகியோர் பங்கேற்றனர்.

கும்மிடிப்பூண்டி ஒன்றியத்தில் 61 ஊராட்சிகளில் 100 சதவீதம் தடுப்பூசி போட்ட முதல் ஊராட்சியாக பல்லவாடா ஊராட்சி என்ற நற்பெயரை பெற்றிருப்பதால் பல்லவாடா ஊராட்சித் தலைவர் பி.லட்சுமி பன்னீர் செல்வத்தை கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழுத் தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார், ஒன்றிய பொறியாளர் நரசிம்மன் உள்ளிட்டோர் பாராட்டினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.