விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கூத்தாநல்லூர்: மனவளர்ச்சி குன்றிய 40 பேருக்கு கரோனா தடுப்பூசி

திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு கரோனா தொற்று எதிர்ப்புக்கான தடுப்பூசி போடப்பட்டது.

News image
Updated On :10 செப்டம்பர் 2021, 9:24 am

DIN

கூத்தாநல்லூர்: திருவாரூர் மாவட்டம், கூத்தாநல்லூர் மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு கரோனா தொற்று எதிர்ப்புக்கான தடுப்பூசி போடப்பட்டது.

மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகமும், மனோலயம் தொண்டு நிறுவனமும் இணைந்து, குடிதாங்கிச்சேரியில் அமைந்துள்ள மனோலயம் மன வளர்ச்சிக் குன்றியோருக்கான பயிற்சிப்பள்ளியில், மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு இரண்டாம் தவணை தடுப்பூசி போடும் முகாம் நடைபெற்றது.

முகாமிற்கு, மனோலயம் மன வளர்ச்சிக்  குன்றியோருக்கான பயிற்சிப் பள்ளியின் நிறுவனரும், மேட்டுப்பாளையம் லயன்ஸ் சங்கத் தலைவருமான ப.முருகையன் தலைமை வகித்தார்.

ஆசிரியர் மகேஸ்வரி முருகையன் முன்னிலை வகித்தார். முதன்மை பயிற்சியாளர் அனுராதா வரவேற்றார். பொதக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் கிரண், சுகாதார ஆய்வாளர் சண்முகராஜ், சுகாதாரப் பணியாளர் எழிலரசன், செவிலியர் செல்வி உள்ளிட்டோர், 46 மன வளர்ச்சிக் குன்றியவர்களுக்கு, இரண்டாம் தவணை கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்தினர். ஏற்பாடுகளை, பயிற்சியாளர் செளமியா, மேலாளர் சுரேஷ் உள்ளிட்டோர் கவனித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.