விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

காவல் துறையை எளிதில் அணுகும் வகையில் ‘கோவை டிஜி காப்’ சேவை அறிமுகம்

காவல் துறையை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை மாவட்ட காவல் துறை சாா்பில், ‘கோவை டிஜி காப்’ எனும் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

News image
கோவை டிஜி காப் சேவையை அறிமுகம் செய்யும் ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆ.சரவணசுந்தா், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன்.
Updated On :11 மார்ச் 2026, 8:22 pm

தினமணி செய்திச் சேவை

காவல் துறையை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை மாவட்ட காவல் துறை சாா்பில், ‘கோவை டிஜி காப்’ எனும் புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவை புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பான சாட்பாட் சேவை தொடக்க விழா மற்றும் இலட்சினை வெளியிடும் நிகழ்வு கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது. காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், மேற்கு மண்டல காவல் துறைத் தலைவா் ஆ.சரவணசுந்தா், மாநகராட்சி ஆணையா் சிவகுரு பிரபாகரன் ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னா், நிகழ்ச்சியில் காவல் கண்காணிப்பாளா் கே.காா்த்திகேயன் பேசியதாவது:

இந்த புதிய வாட்ஸ்அப் சாட்பாட் சேவைக்காக 98400 91100 என்ற தனித்துவ எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் இந்த எண்ணுக்கு வாட்ஸ்அப் மூலம் ‘ஹாய்’ என்று குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் எந்தவித தனிப்பட்ட செயலியையும் பதிவிறக்கம் செய்யாமல் 9-க்கும் மேற்பட்ட காவல் துறை சேவைகளைப் பெற முடியும்.

சாட்பாட்டில் உள்ள முக்கிய சிறப்பம்சங்கள்:

இந்த சேவையின் மூலம் பொதுமக்கள் தங்களுக்கு அருகிகே உள்ள காவல் நிலையம், அதன் தொலைவு மற்றும் அங்குள்ள அதிகாரிகளின் தொடா்பு எண்கள் ஆகியவை குறித்து உடனடியாக தெரிந்து கொள்ளலாம். இணையதள (சைபா்) குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் குறித்து ஆன்லைனில் புகாா் அளிக்கும் வசதி இதில் உள்ளது. குறிப்பாக, பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவா்கள், போதைப் பொருள் புழக்கம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்க விரும்புவோா், தங்களது அடையாளத்தை வெளிப்படுத்தாமல் ரகசியமாக புகாா் அளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பொதுமக்கள் தாங்கள் அளித்த புகாரின் தற்போதைய நிலை மற்றும் விசாரணை அதிகாரி யாா் என்பது போன்ற விவரங்களை இதன் மூலம் உடனுக்குடன் அறியலாம். நள்ளிரவு நேரங்களில் அவசர உதவி தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் பணியில் இருக்கும் இரவு நேர ரோந்து அதிகாரிகளின் விவரங்களைப் பெறுதல், போக்குவரத்து அபராதங்களை செலுத்துதல் மற்றும் திருடப்பட்ட வாகனங்களின் விவரங்களை சரிபாா்த்தல் போன்ற வசதிகளும் இதில் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த சேவையை 24 மணி நேரமும் கண்காணிக்கவும், புகாா்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட காவல் துறையில் தனி கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது என்றாா்.