போர்ப் பதற்றம்! மத்திய கிழக்கில் 10, 12 ஆம் வகுப்பு சிபிஎஸ்இ பொதுத் தேர்வுகள் ஒத்திவைப்பு!சமூக வலைதளங்களை விட்டு இளைஞர்கள் களத்திற்கு வர வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!ஈரான் உச்ச தலைவர் கமேனி படுகொலையை ஆதரிக்கிறாரா மோடி? ராகுல் கேள்விகூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!
/

சபரிமலையில் செப். 17 முதல் 5 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி

இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் செப். 17 முதல் சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

News image
சபரிமலையில் செப். 17 முதல் 5 நாள்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி
Updated On :11 செப்டம்பர் 2021, 7:31 am

DIN

இணையதளம் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் செப். 17 முதல் சபரிமலையில் சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று கோயில் தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

மலையாள மாதத்தின் கன்னி மாத பூஜைக்காக செப்டம்பர் 17-ஆம் தேதி கோயில் நடை திறக்கப்படும் என்றும், அது முதல் 5 நாள்களுக்கு பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி வழங்க கோயில் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஒவ்வொரு நாளும், இணையதளத்தில் முன்பதிவு செய்த 15 ஆயிரம் பக்தர்கள்  மட்டுமே சுவாமி தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். செப் 21 வரை அதாவது ஐந்து நாள்களுக்கு பக்தர்கள் தரிசனத்துக்கு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறந்திருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்பதிவு செய்து சுவாமி தரிசனம் செய்ய கோயிலுக்கு வரும் பக்தர்கள், 48 மணி நேரத்துக்கு முன்பு எடுத்த கரோனா பரிசோதனை சான்றிதழ் அல்லது இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டதற்கான சான்றிதழ் அவசியம் வைத்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.