வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் முழு புள்ளி விவரம்

சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, பல்வேறு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

News image
சென்னையில் கரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டோர் முழு புள்ளி விவரம்
Updated On :16 செப்டம்பர் 2021, 9:02 am

DIN


சென்னை: சென்னையில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது, பல்வேறு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சென்னை மாநகரத்தில் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களின் முழு புள்ளி விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் நேற்று வரை ஒட்டுமொத்தமாக 46,32,776 பேர் கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். அதில் செப்டம்பர் 15ஆம் தேதி மட்டும் 13,271 பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டனர்.

இவர்களில் கோவிஷீல்டு தடுப்பூசியை முதல் தவணையாக 24,21,181 பேரும், 2வது தவணையாக 10,54,687 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 34.75 லட்சம் பேர் கோவிஷீல்டு தடுப்பூசியை செலுத்திக் கொண்டுள்ளனர்.

Story image

கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாக 6,94,659 பேரும், இரண்டாவது தவணையாக 4,62,249 பேரும் செலுத்திக் கொண்டுள்ளனர். ஒட்டுமொத்தமாக 11,56,908 பேர் கோவாக்சின் செலுத்திக் கொண்டுள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.