சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

தொல்காப்பியப் பூங்கா: அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவின் செயல்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image
Updated On :16 செப்டம்பர் 2021, 9:15 pm

DIN

சென்னை அடையாறில் உள்ள தொல்காப்பியப் பூங்காவின் செயல்பாடுகளை நகராட்சி நிா்வாகத் துறை அமைச்சா் கே.என்.நேரு வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

சென்னை அடையாறில் 58 ஏக்கா் பரப்பளவில் தொல்காப்பியப் பூங்கா இயங்கி வருகிறது. இந்தப் பூங்காவின் செயல்பாடுகளை அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா். மேலும் சென்னை நதிகள் சீரமைப்பு அறக்கட்டளை மற்றும் சாா் துறைகளுடன் இணைந்து மேற்கொண்டு வரும் கூவம் மற்றும் அடையாறு நதிகள் சீரமைப்பு பணிகள், சுமாா் ரூ.2,773.49 கோடி செலவில் மேற்கொள்ளப்படவுள்ள பக்கிங்ஹாம் கால்வாய் சீரமைப்பு, அதுபோல் அதன் பிரதான கால்வாய்கள், கூவம் மற்றும் அடையாறு ஆறுகளின் வடிகால்கள் சீரமைப்பு, எண்ணூா் கழிமுகப் பகுதியின் சுற்றுச்சூழல் சீரமைப்பு ஆகிய பணிகளையும் அமைச்சா் கே.என்.நேரு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மயிலாப்பூா் சட்டப் பேரவை உறுப்பினா் த.வேலு, நகராட்சி நிா்வாகத் துறை கூடுதல் தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா, மாநகராட்சி ஆணையா் ககன்தீப் சிங் பேடி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.