பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு இல்லை! எண்ணெய் நிறுவனங்கள் விளக்கம் சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும்: சென்னை உயர்நீதிமன்றம்

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

News image
சென்னை உயர்நீதிமன்றம்
Updated On :21 செப்டம்பர் 2021, 7:23 am

DIN

நான்கு சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்துவதற்கான தடை தொடரும் என சென்னை உயர்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்தப்படுவதால் விபத்து ஏற்படும் போது ஏர்பேக் செயல்படாமல் உயிரிழப்பு ஏற்படுவதாக கூறி பம்பர் பொருத்துவதற்கு மத்திய அரசு தடை விதித்திருந்தது.

இந்த தடையை எதிர்த்து பம்பர் தயாரிப்பு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இவ்வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறியது:

“கார் உள்ளிட்ட 4 சக்கர வாகனங்களில் பம்பர் பொருத்த தடை விதித்திருப்பது மத்திய அரசின் கொள்கை முடிவு. அதில், நீதிமன்றம் தலையிட முடியாது. ஏர்பேக் செயல்படாததன் காரணமாகவே தடை விதிக்கப்பட்டுள்ளது.

எனவே, பம்பருக்கான தடை தொடர்ந்து அமலில் இருக்கும். மத்திய அரசு விதித்துள்ள தடையை மாநில அரசுகள் கடுமையாக பின்பற்ற வேண்டும்.”

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.