பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

செப்.1-இல் பள்ளிகள் திறப்பது உறுதி: அன்பில் மகேஷ் பொய்யாமொழி

செப்டம்பர் 1ஆம் தேதி முதல்வர் அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக

News image
செப்.1-இல் பள்ளிகள் திறப்பது உறுதி: அன்பில் பொய்யாமொழி
Updated On :21 ஆகஸ்ட் 2021, 12:59 pm

DIN

திருச்சி: செப்டம்பர் 1ஆம் தேதி முதல்வர் அறிவித்தபடி பள்ளிகள் திறக்கப்படும் என்பதில் அரசு உறுதியாக இருப்பதாக தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

திருச்சியில் சனிக்கிழமை செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கூறியது: தமிழக முதல்வர் அறிவித்தபடி செப்.1ஆம் தேதி, 9ஆம் வகுப்பு முதல் 12ஆம் வகுப்பு வரையிலான மாணவர், மாணவிகளுக்காக பள்ளிகள் திறக்கப்படவுள்ளன. இதற்காக, பொது சுகாதாரத்துறை அளித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை முறையாக பின்பற்ற அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

குறிப்பாக பள்ளிகளில் முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளி, கிருமிநாசினி மருந்து தெளித்தல் ஆகியவை கட்டாயமாக்கப்படும். 50 சதவீத மாணவர்கள் சுழற்சி முறையில் பங்கேற்பர். ஆசிரியர்கள் அனைவரும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளில் அதிகளவு மாணவர்கள் சேர்ந்துள்ளதால் அதற்கேற்ப கட்டமைப்பு வசதிகள் மற்றும் ஆசிரியர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

கூடுதலாக உள்ள இடங்களில் இருந்து தேவையான இடங்களுக்கு ஆசிரியர்கள் பணிமாற்றம் செய்யப்படுவர். இதற்காக ஆசிரியர் பணிமாறுதல் கலந்தாய்வு நடத்தப்படும். இதன் தொடர்ச்சியாக புதிய ஆசிரியர்கள் நியமனம் தொடர்பாக முதல்வர் அறிவுரையின்படி காலிப் பணியிடங்கள் பூர்த்தி செய்யப்படும். இதுதொடர்பாக, அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் அறிக்கை கோரப்பட்டுள்ளது என்றார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.