தமிழக முதல்வரின் அறிவுறுத்தலின்படி, கரோனா 3வது அலை என்று ஒன்று வந்தால்கூட, மருத்துவ வல்லுநர்களின் கருத்துப்படி, அது குழந்தைகளைத் தாக்கும் என்கிற கருத்துப்படி, தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவமனைகளில் குழந்தைகளுக்கான கோவிட் சிறப்பு சிகிச்சை வார்டினை அமைக்க வலியுறுத்தினார்கள். எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் 200 படுக்கைகள் கொண்ட வார்டினை திறந்து வைத்தும் பயன்பாட்டிற்குக் கொண்டுவந்தார்கள். ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே குழந்தைகள் சிகிச்சை வார்டு ஒன்று இருந்தாலும், அதிநவீன குழந்தைகள் தீவிர சிகிச்சை வார்டு; ஒன்று அதுவும் குழந்தைகள் சிகிச்சை எடுத்துக்கொள்கிறபோது அவர்களுக்குப் பிடித்தமான கார்ட்டூன்கள், வண்ண வண்ண ஓவியங்கள் போன்றவற்றை அறையில் வைத்து, ஏறத்தாழ 15 படுக்கைகள் கொண்ட சிறப்பு வசதிகளுடன் வெண்டிலேட்டர்களுடன் கூடிய வார்டு ஒன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.