தமிழகத்தில் புதிதாக 640 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது புதன்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழக கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகளை மாநில மக்கள் நல்வாழ்வுத் துறை செய்திக் குறிப்பு மூலம் வெளியிட்டுள்ளது. 1,02,544 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டதில் 640 பேருக்கு மட்டுமே நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதைத் தொடர்ந்து, தமிழகத்தில் மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 27,37,335 ஆக உயர்ந்துள்ளது.
இதையும் படிக்க | முன்னாள் அமைச்சர் தங்கமணி தொடர்புடைய இடங்களில் ரூ.2.16 கோடி பறிமுதல்
மேலும் 692 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 11 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இதுவரை மொத்தம் 26,93,143 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 36,644 பேர் நோய்த் தொற்றுக்கு பலியாகியுள்ளனர்.
இன்றைய நிலவரப்படி 7,548 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
மாவட்டங்கள்:
சென்னை - 126
கோவை - 106
மற்ற மாவட்டங்களில் 50-க்கும் குறைவான பாதிப்புகளே பதிவாகியுள்ளன.