மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

நகைக்கடன் முறைகேடு: இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் தூக்கிட்டுத் தற்கொலை

நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

News image

கோப்புப்படம்

Updated On :15 டிசம்பர் 2021, 6:35 am

DIN

புதுக்கோட்டை: நகைக்கடன் முறைகேட்டில் இடைநீக்கம் செய்யப்பட்ட கூட்டுறவு வங்கிச் செயலர் அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.

புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் தொடக்கக் கூட்டுறவு வேளாண்மை மற்றும்ஊரக வளர்ச்சி வங்கியில் நடைபெற்ற நகைக்கடன் பொட்டலங்கள் ஆய்வு செய்யப்பட்டபோது ரூ. 1.08 கோடி மதிப்பில் 102 பொட்டலங்கள் இருப்பில் இல்லை.

இதைத்தொடர்ந்து வங்கிச் செயலர் பி. நீலகண்டன் (53) மற்றும் மேற்பார்வையாளர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். நகை மதிப்பீட்டாளர் பணியில் இருந்து விடுவிக்கப்பட்டார்.

இந்த நிலையில், இடைநீக்கம் செய்யப்பட்ட செயலர் பி. நீலகண்டன் புதன்கிழமை காலை கீரனூர் சிவன்தெருவிலுள்ள அவரது வீட்டின் கழிப்பறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.

தகவலறிந்து வந்த கீரனூர் போலீஸார், சடலத்தைக் கைப்பற்றி உடற்கூராய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.