வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு

வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு
வேலூரில் பிரபல நகைக் கடையில் சுவரில் துளையிட்டு திருட்டு


வேலூர்: வேலூரில் உள்ள பிரபல தனியார் நகைக்கடையின் சுவரில் துளையிட்டு நகைகள் திருடப்பட்டுள்ளன. இச்சம்பவம் தொடர்பாக காவலர்கள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேலூர் காட்பாடி சாலையில் ஜோஸ் ஆலுக்காஸ் தங்க நகைக் கடை அமைந்துள்ளது. இந்தக் கடையின் தரைதள பக்கவாட்டுச் சுவரில் நள்ளிரவு அடையாளம் தெரியாத நபர்கள் துளையிட்டு நகைகளைக் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். காலையில் கடையை திறந்து பார்த்தபோது ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த வேலூர் வடக்கு காவலர்கள் சம்பவ இடத்திற்குச் சென்று தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். திருட்டுப் போன நகைகளின் மதிப்பு குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com