பங்குச்சந்தை கடும் வீழ்ச்சி! ரூ. 5.5 லட்சம் கோடி இழப்பு!!வாக்காளர் பட்டியலில் இப்போதுகூட பெயர் சேர்க்கலாம்! தலைமைத் தேர்தல் ஆணையர் தகவல்ஜெயலலிதா வாழ்நாள் முழுவதும் எதிர்த்த கட்சியில் ஓபிஎஸ்: தமிழிசை கடும் விமர்சனம்!தில்லி மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கு: கேஜரிவால், சிசோடியா விடுவிப்பு! எம்எல்ஏ பதவியை ராஜிநாமா செய்தார் ஓ. பன்னீர்செல்வம்! திமுகவில் இணைந்தார் ஓ. பன்னீர்செல்வம்!
/

முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் உள்ளிட்டோர் மீது வழக்கு

நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

News image
Updated On :28 ஜனவரி 2024, 5:43 am

DIN

நாகப்பட்டினம்: தமிழக அரசைக் கண்டித்து நாகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட அதிமுக நாகை மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் உள்ளிட்ட நிர்வாகிகள் மீது நாகை போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மக்கள் பிரச்னையில் திமுக அரசு உரிய கவனம் செலுத்தவில்லை எனக் கூறி நாகை மாவட்ட அதிமுக சார்பில்  நாகை அவுரித்திடலில் கண்டன  ஆர்ப்பாட்டம் வெள்ளிக்கிழமை  நடைபெற்றது. 

கட்சியின் மாவட்டத்தலைவர் ஆர்.ஜீவானந்தம் தûலைமையில் நடைபெற்ற  இந்த ஆர்ப்பாட்டத்தில் அதிமுத  நாகை மாவட்டச் செயலாளரும்,  வேதாரண்யம் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான ஓ.எஸ்.மணியன் பங்கேற்றுப் பேசினார்.

இந்நிலையில், அதிமுக  மாவட்ட அவைத்தலைவர் ஆர்.ஜீவானந்தம்,
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன், அமைப்புச் செயலாளர் எஸ். ஆசைமணி, நாகை நகரச் செயலாளர் தங்க.கதிரவன், நகர அவைத் தலைவர் ப. அறிவழகன் மற்றும் பலர் மீது சட்ட விரோதமாக பொது  இடத்தில் கூடுதல், வழிமறித்தல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வெளிப்பாளையம் நாகை போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.