மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

பங்காரு அடிகளாரிடம் நேரில் நலம் விசாரித்த முதல்வர் ஸ்டாலின்

முதல்வர் ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். 

News image
Updated On :18 டிசம்பர் 2021, 10:38 am

DIN

முதல்வர் ஸ்டாலின் இன்று மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்று நலம் விசாரித்தார். 

திமுக தலைவருமான முதல்வருமான மு.க. ஸ்டாலின், செங்கல்பட்டு மாவட்டம் மேல்மருவத்தூரில் இன்று நடைபெற்ற அரசு விழாவிற்குச் சென்றபோது, அங்குள்ள ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் இல்லத்திற்குச் சென்றார்.  அதுபோது, பங்காரு அடிகளாரை சந்தித்து நலம் விசாரித்தார். 

ஆதிபராசக்தி பங்காரு அடிகளாரின் மனைவி லட்சுமி பங்காரு அடிகளார், அவரது மகன் கோ.ப.அன்பழகன் மற்றும் குடும்பத்தினர் உடன் இருந்தனர்.

அதோடு, ஆதிபராசக்தி அறக்கட்டளை மருத்துவமனையில் இன்னுயிர் காப்போம் - நம்மைக் காக்கும் 48 திட்டத்துக்கான அவசர சிகிச்சைப் பிரிவினையும் திறந்து வைத்தார். அதுபோது அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.