திருச்சி: திருச்சியைச் சேர்ந்த முதுபெரும் நாடகக் கலைஞரும், கார்முகில் புத்தகக் கடை உரிமையாளருமான முத்துவேலழகன்(86) உடல்நலக்குறைவால் காலமானார்.
திருச்சி கருமண்டபம் பகுதியில் உள்ள வசந்த் நகரில் வசித்து வந்த இவர், திருச்சி ஜங்ஷன் பகுதியில் கார்முகில் என்ற பெயரில் புத்தகக் கடை நடத்தி வந்தார். ரயில்வேயில் பணிபுரிந்தவர்.
இளம்வயது முதலே நாடகத்தின் மீது கொண்ட பற்றுதலால், நாடகக் கலைஞராக உருவெடுத்தார். 33-க்கும் மேற்பட்ட நாடகங்களை எழுதி இயக்கியுள்ளார். பிரியமுடன் பிரபு என்ற தமிழ்த் திரைப்படத்தில் இணை இயக்குநராகவும் பணியாற்றியவர். இவரது பதினெட்டாம் போர் என்ற நாடகம் பிரசித்தி பெற்றது.
தமிழ் நாடக உலகில் முன்னோடியாகவும் விளங்கிய இவர் தனது வாழ்நாள் முழுவதும் நாடகக் கலைக்காக செலவிட்டவர். கடந்த சில நாள்களாக உடல் நலன் பாதிக்கப்பட்டவர், வெள்ளிக்கிழமை காலை காலமானார். அவருக்கு 2 மகன்கள், 4 மகள்கள், பேரன்கள், பேத்திகள் உள்ளனர்.
தொடர்புக்கு 98945-38863.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சென்னையில் மோடி தலைமையில் பாஜக மையக்குழு கூட்டம்! அண்ணாமலை பங்கேற்பு!

சிஎஸ்கே அணியின் கேப்டன், தலைமைப் பயிற்சியாளர் பதவி விலகுவார்களா?

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

6-ஆம் வகுப்புமுதல் மும்மொழிப் பாடம்: சிபிஎஸ்இ திட்டத்துக்கு முதல்வர் ஸ்டாலின் கண்டனம்!
வீடியோக்கள்

மேன்சன் குத்து பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

இந்திரா பாடல் வெளியீடு!
இணையதளச் செய்திப் பிரிவு
ஹிந்துக்களுக்கு எதிரானதா திமுக?: கனிமொழி எம்.பி. விளக்கம் | #tnelection2026 | DMK |
இணையதளச் செய்திப் பிரிவு

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை


