2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

சிதம்பரம் அருகே சாலை விபத்தில் தலைமை காவலர் பலி

சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகன விபத்தில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் பலியானது குறித்து....

Head Constable Killed in Road Accident Near Chidambaram

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் பிரபு - டிஎன்எஸ்

Published On :

சிதம்பரம்: சிதம்பரம் அருகே வெள்ளிக்கிழமை இரவு வாகன விபத்தில் சிதம்பரம் தாலுகா காவல் நிலைய தலைமை காவலர் பலியானார்.

கடலூர் மாவட்டம், கோனேரி தாலுக்கா கீரப்பாளையம் மேட்டு தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் எஸ். பிரபு (42). இவர் சிதம்பரம் தாலுக்கா காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார்.

இந்த நிலையில், வெள்ளிக்கிழமை இரவு சுமார் 10 மணியளவில் 2026 சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு காட்டுமன்னார்கோயில் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட பகுதியில் தேர்தல் ரோந்து பணி முடித்துவிட்டு வீட்டிற்கு சென்றுகொண்டிருந்த போது ஒரத்தூர் காவல் நிலையம் எல்லையான சாத்தமங்கலம் அருகே மினி டோர் லாரி மோட்டார் சைக்கிளில் மோதி விபத்துக்குள்ளானார். இதில் படுகாயம் அடைந்த தலைமை காவலரை அருகில் இருந்தோர் மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் அண்ணாமலை நகரில் உள்ள கடலூர் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.

விபத்தில் உயிரிழந்த தலைமை காவலர் பிரபுவுக்கு சுமதி என்ற மனைவியும், சமிக்ஷா, ஜீவிஷா ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர்.

விபத்து குறித்து ஒரத்தூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Head Constable Killed in Road Accident Near Chidambaram

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.