நேபாள திடீர் வெள்ள பலி எண்ணிக்கை 768-ஆக உயர்வு; 2,500-க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரம்! சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 682 ஆக உயர்வு! தொடரும் மீட்புப் பணிகள்!மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு குறைப்பு ஏற்புடையதல்ல: திருமாவளவன்நேபாளத்துக்கு 68.5 டன் நிவாரணப் பொருள்களை அனுப்பிய இந்தியா!நேபாளம்: வெள்ளத்தில் அடித்து வரப்பட்ட வங்கி லாக்கரை உடைத்து ரூ.58 லட்சம் திருட்டு!கேப்டன் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டதும் மிகுந்த அதிர்ச்சியடைந்தேன்: சூர்யகுமார் யாதவ்

புதுச்சேரியில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைப்பு: மக்கள் மகிழ்ச்சி

புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைத்து அதற்கான அரசாணையை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 

Published On :28 ஜனவரி 2024, 10:01 am IST


புதுச்சேரி: புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ.7 அளவில் குறைத்து அதற்கான அரசாணையை முதல்வர் என். ரங்கசாமி வெளியிட்டுள்ளார். 

மத்திய அரசு பெட்ரோல் மீதான கலால் வரியை ரூ. 5 அளவிலும், டீசல் மீது ரூ. 10 என்ற அளவிலும் வரியை குறைத்து தீபாவளியன்று அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், புதுச்சேரி அரசு சார்பில் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான வாட் வரி ரூ. 7 அளவில் குறைத்து நடவடிக்கை எடுத்து அதற்கான அரசாணையும் முதல்வர் என்.ரங்கசாமி வெளியிட்டுள்ளார். இந்த நடைமுறை தீபாவளி தினமான இன்று வியாழக்கிழமை (நவ.4) முதல் அமலுக்கு வந்துள்ளது.

மத்திய, மாநில அரசின் வரி குறைப்பு மூலம் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 12.85 காசுகளும், டீசல் ரூ.19 ஆகவும் குறையும்.

மத்திய, மாநில அரசின் இந்த வரி குறைப்பு மூலம், விலை குறைந்து அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையில் தீபாவளி பரிசாக அமையுமென்று முதல்வர் என். ரங்கசாமி தெரிவித்துள்ளார்.

இதையடுத்து புதுச்சேரியில் ஒரு லிட்டர் ரூ. 107. 79க்கு விற்பனையாகி வந்த பெட்ரோல் தற்போது ரூ. 94.94 ஆகவும், ரூ.102.66க்கு விற்பனையாகி வந்த டீசல் ரூ. 83.58  ஆக குறைந்து விற்பனைக்கு வந்துள்ளது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.