தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் இன்று 10 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடகிழக்கு பருவ மழை காரணமாக சனிக்கிழமை இரவுமுதல் பெய்த கனமழையாக் சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை வெள்ள பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் நிவாரண பணிகளை விரைவாக மேற்கொள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்றும் நாளையும் விடுமுறை அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில், இரவு முழுவதும் கடலூர், விழுப்புரம், சேலம், வேலூர், திருப்பத்தூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை தொடர்வதால், அந்தந்த மாவட்ட ஆட்சியர்களே பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளனர்.
மேலும் மயிலாடுதுறை, ராணிப்பேட்டை, பெரம்பலூர், அரியலூர், திருச்சி, தஞ்சை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
புதுக்கோட்டை, திருவாரூரில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர் மழையால் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.