21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை

தமிழகத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மாணவர்கள் சிரமத்தை கருத்தில்கொண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (நவ.8) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

இதுவரை 21 மாவட்டங்களில் பள்ளிகளுக்கும், 9 மாவட்டங்களில் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வேலூர், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், நாமக்கல்,  கடலூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, நாகை, கரூர், புதுக்கோட்டை, ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை  அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருப்பத்தூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, சேலம், சிவகங்கை, தஞ்சை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானலில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com