ஈரானால் அச்சுறுத்தல் இல்லை - போரை ஆதரிக்க முடியாது: அமெரிக்க தேசிய பயங்கரவாத எதிர்ப்பு மைய இயக்குநர் ராஜிநாமாரஜினி ரசிகர்களுக்கு அங்கீகாரம் கொடுத்தது தவெக : ஆதவ் அர்ஜுனா விளக்கம்234 தொகுதிகளிலும் தவெக தனித்துப் போட்டி! - ஆதவ் அர்ஜுனா பேச்சுபெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

நிரம்பும் தறுவாயில் மேட்டூர் அணை: தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை நிரம்பும் தறுவாயில் இருப்பதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

News image
நிரம்பும் தறுவாயில் மேட்டூர் அணை: தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை
Updated On :8 நவம்பர் 2021, 11:56 am

DIN

மேட்டூர் அணை நிரம்பும் தறுவாயில் இருப்பதால் காவிரி கரையோரம் உள்ள 12 மாவட்ட ஆட்சியர்களுக்கு மேட்டூர் பொதுப்பணித்துறை சார்பில் முன்னெச்சரிக்கையாக வெள்ள அபாய எச்சரிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

மேட்டூர் அணை நிரம்பும் நிலையில் இருப்பதால் அணையிலிருந்து எந்நேரமும் மேட்டூர் அணையின் இடது கரையில் உள்ள உபரி நீர் போக்கி மூலம் உபரிநீர் வெளியேற்றப்படலாம். 

Story image

இதனால் மேட்டூர் அணையின் உபரிநீர் கால்வாய் ஓரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல வேண்டும் என மேட்டூர் வருவாய்த்துறை சார்பில் தண்டோரா மூலம்  எச்சரிக்கப்பட்டுள்ளது. 

Story image

மேட்டூர் வட்டாட்சியர் ஹசினா பானு முன்னிலையில் தங்க மாபுரிபட்டினம், அண்ணா நகர், பெரியார் நகர் பகுதிகளில் தண்டோரா மூலம் பொதுமக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

Story image

மேட்டூர் நகராட்சியில் ஒலிப்பெருக்கி மூலம் காவிரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேட்டூர் நகராட்சி பகுதியில் உள்ள எம்ஜிஆர் நகர், அண்ணாநகர், குள்ளவீரன்பட்டி பகுதிகளிலும் தண்டோரா மூலம் தாழ்வான பகுதிகளில் வசிக்கும்பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல எச்சரிக்கப்பட்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.