தமிழகத்தில் 3 நாள்களுக்கு அதி கனமழை தொடரும்: வானிலை மையம்

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு அதி கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
சென்னை வெள்ள பாதிப்பு
சென்னை வெள்ள பாதிப்பு

தமிழகத்தில் மூன்று நாள்களுக்கு அதி கனமழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்ட செய்தியில்,

தென்கிழக்கு வங்கக்கடல்‌ மற்றும்‌ அதனை ஒட்டிய பகுதியில்‌ குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது அடுத்த 36 மணி நேரத்தில்‌ காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில்‌ நகர்ந்து 11ஆம்‌ தேதி காலை தமிழக கரையை நெருங்ககூடும்‌. 

இதன்காரணமாக இன்று டெல்டா மாவட்டங்கள்‌, புதுக்கோட்டை, ராமநாதபுரம்‌ மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கனமழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதிகன மழையும்‌, தென்காசி, திருநெல்வேலி, தூத்துக்குடி, கடலூர்‌, மதுரை, சிவகங்கை, மாவட்டங்களில்‌ ஒரு சில
இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, சென்னை, திருவள்ளூர்‌, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சி,  விழுப்புரம்‌, விருதுநகர்‌ மற்றும்‌ புதுச்சேரி பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

 நாளை(10.11.2021): டெல்டா மாவட்டங்கள்‌, கடலூர்‌, விழுப்புரம்‌, புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம்‌ மாவட்டங்கள்‌ மற்றும்‌ புதுவை, காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, இருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்‌, மதுரை, அரியலூர்‌, பெரம்பலூர்‌, காஞ்சிபுரம்‌, திருவள்ளூர்‌, செங்கல்பட்டு, மாவட்டங்களில்‌ ஒரு இல இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன முதல்‌ மிக கன மழையும்‌, நீலகிரி, கோயம்புத்தூர்‌, ஈரோடு, சேலம்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, திருவண்ணாமலை மற்றும்‌ கள்ளக்குறிச்சி மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌ .

 
11.11.2021: திருவள்ளூர்‌, சென்னை, காஞ்சிபுரம்‌, செங்கல்பட்டு, விழுப்புரம்‌, திருவண்ணாமலை மாவட்டங்களில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய
கன முதல்‌ மிக கன மழையும்‌, ஓரிரு இடங்களில்‌ அதி கனமழையும்‌, கடலூர்‌, வேலூர்‌, ராணிப்பேட்டை, திருப்பத்தூர்‌, கள்ளக்குறிச்‌சி, சேலம்‌, திருப்பூர்‌, கோயம்புத்தூர்‌, நீலகிரி, திண்டுக்கல்‌ மற்றும்‌ புதுவை மாவட்டங்களில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய மிக கன மழையும்‌, டெல்டா மாவட்டங்கள்‌,
அரியலூர்‌, பெரம்பலூர்‌, திருச்சிராப்பள்ளி, ராமநாதபுரம்‌, புதுக்கோட்டை, மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஓரிரு இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழையும்‌, ஏனைய மாவட்டங்களில்‌ பெரும்பாலான இடங்களில்‌ லேசானது முதல்‌ மிதமான மழையும்‌ பெய்யக்கூடும்‌.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம்‌ பொதுவாக மேகமூட்டத்துடன்‌ காணப்படும்‌. நகரின்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய கன மழை பெய்யக்கூடும்‌.

அடுத்த 48 மணி நேரத்‌திற்கு நகரின்‌ ஒருசில இடங்களில்‌ கன முதல்‌ மிக கன மழை பெய்யக்கூடும்‌. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com