Enable Javscript for better performance
பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 5,558 கன அடி உபரி நீர் திறப்பு- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    பூண்டி ஏரிக்கு நீர் வரத்து அதிகரிப்பு: 5,558 கன அடி உபரி நீர் திறப்பு

    By DIN  |   Published On : 10th November 2021 12:27 PM  |   Last Updated : 10th November 2021 12:27 PM  |  அ+அ அ-  |  

    பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து 5,558 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

    பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தில் இருந்து 5,558 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

     

    திருவள்ளூர்: பூண்டி ஏரிக்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை மற்றும் அம்மம்பள்ளி அணை நீர் என வரத்து அதிகரித்துள்ளதால் புதன்கிழமை 5 ஆயிரம் கன அடியிலிருந்து உபரி நீர் திறப்பு 5,558 கன அடியாக கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருவள்ளூர் அருகே பூண்டி நீர்த்தேக்கத்திற்கான நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்து வரும் தொடர் மழை, ஆந்திர மாநிலம் அம்மம்பள்ளி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் ஏரியில் நீர்மட்டம் அதிகரித்தும் வருகிறது.

    இதையும் படிக்கவாய்ப்பை நழுவவிடாதீர்கள்... பொதுத்துறை வங்கிகளில் 1828 அதிகாரி வேலைவாய்ப்பு அறிவிப்பு

    இந்த நிலையில் பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்திற்கு செவ்வாய்க்கிழமை  மாலை 6 மணி நிலவரப்படி நீர்வரத்து விநாடிக்கு 4095 கன அடியாக நீர் வரத்து இருந்தது. இந்த நிலையில் புதன்கிழமை 4996 கன அடியாக வரத்து அதிகரித்தது. இந்த ஏரி 35 அடி உயரமும், 3231 கொள்ளளவு கொண்டதாகும். தற்போது ஏரி 33.28 உயரமும், 2603 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது.

    இதையும் படிக்கவேலை வேண்டுமா...? இஸ்ரோவில் மொழிப்பெயர்பாளர் வேலைக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

    அதனால் நீர் வரத்து உயரும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பூண்டி ஏரியிலிருந்து கொசஸ்தலை ஆற்றில் 5,558 கன அடி உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. அதனால், கொசஸ்தலை ஆறு கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்களுக்கு வெள்ள அபாயமும் ஏற்கெனவே விடுத்துள்ளதாகவும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

    செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp