பூண்டி ஏரியிலிருந்து 8070 கன அடி உபரி நீர் வெளியேற்றம்

பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பூண்டி ஏரியிலிருந்து 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
பூண்டி ஏரியிலிருந்து 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.


திருவள்ளூர்: பூண்டி ஏரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை நீர் வரத்து அதிகரித்து வருவதால் 8070 கன அடி உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருவதாக பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த 5 நாள்களாக பரவலாக மழை பெய்து வருவதால் சென்னைக்கு குடிநீர் வழங்கும் முக்கிய 5 ஏரிகளின் நீர் வரத்து அதிகமாக இருந்ததால் உபரிநீர் வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டு வருகிறது.

பூண்டி நீர்த்தேக்கம்: பூண்டி சத்தியமூர்த்தி சாகர் நீர்த்தேக்கத்தின் உயரம் 35 அடியும், 3231 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு கொண்டது. தற்போதைய நிலையில் 33.90 அடி உயரமும், 2792 மில்லியன் கன அடி இருப்பு உள்ளது. இந்த நிலையில் சில நாள்களாக பெய்து மழையால் ஆந்திரம் மாநில அம்மம்பள்ளி அணை உபரி நீர், நீர்ப்பிடிப்பு பகுதி நீர்வரத்து என 8,244 கன அடியாக உள்ளது. அதனால் சனிக்கிழமை காலை முதல் 8,079 கன அடிநீர் வெளியேற்றப்படுகிறது.

புழல் ஏரி: புழல் ஏரியின் உயரம் 21.20 அடியும், 3300 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் 19.17 அடி உயரமும், 2846 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. மேலும், 829 கன அடியாக நீர்வரத்து உள்ளது. சென்னை குடிநீருக்கு 200 கன அடியும், உபரிநீர் 1000 கன அடி உபரி நீரும் திறந்து விடப்பட்டுள்ளது.

செம்பரம்பாக்கம் ஏரி: செம்பரம்பாக்கம் ஏரியின் 24 அடி உயரமும், 3645 மில்லியன் கன அடி நீர் கொள்ளளவு ஆகும். தற்போதைய நிலையில் 21.34 அடி உயரமும், 2944 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. குடிநீருக்காக 150 கன அடியும், 1000 கன அடி உபரிநீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

சோழவரம் ஏரி: சோழவரம் ஏரியின் உயரம் 18.86 அடியும், 1081 மில்லியன் கன அடிநீர் கொள்ளளவு கொண்டதாகும். தற்போதைய நிலையில் 17.22 அடி உயரமும், 821 மில்லியன் கன அடி நீர் இருப்பு உள்ளது. ஏரிக்கு நீர்வரத்து வினாடிக்கு 647 கனஅடியாக உள்ளது. அதனால் 500 கன அடி குடிநீருக்காகவும், 1000 கன அடி உபரி நீரும் திறந்துவிடப்பட்டுள்ளது.

கண்ணன் கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்த்தேக்கம்: கண்ணன்கோட்டை-தேர்வாய் கண்டிகை நீர்தேக்கத்தின் உயரம் 36.61 அடியில், 500 மில்லியன் கன அடி நீர் சேமிக்கலாம். தற்பதைய நிலையில் 36.61 அடி உயரமும், 500 மில்லியன் கன அடி நீரும் இருப்புள்ளது. ஏரிக்கு நீர்வரத்து 305 கன அடியாக உள்ளதால் அப்படியே உபரிநீர் 305 கன அடி வெளியேற்றப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com