மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு 100 கன அடியாக குறைப்பு

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டது.
மேட்டூர் அணை
மேட்டூர் அணை


மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 12,000 கன அடியிலிருந்து 100 கன அடியாக குறைக்கப்பட்டது.

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 5-ஆவது நாளாக 119 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழை தணிந்ததன் காரணமாக, அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 14,812 கன அடியிலிருந்து 12,396 கன அடியாக குறைந்துள்ளது.

தற்போது அணையிலிருந்து வினாடிக்கு 12,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது 100 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. அணையின் நீர் இருப்பு 91.97 டி.எம்.சி. ஆக உள்ளது.

மேட்டூர் அணையிலிருந்து திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 100 கன அடியாக குறைக்கப்பட்டதால் அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவான 120 அடியை நாளை எட்ட வாய்ப்புள்ளது. 

நீர்வரத்து அதிகரிப்பு
தற்போது சனிக்கிழமை பகல் 12 மணியளவில் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு வினாடிக்கு 12,396 கனஅடியில் இருந்து 16,020 கன அடியாக அதிகரித்துள்ளது.

காவிரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு  அதிகரித்து வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com