சென்னை புறநகர் ரயில் சேவை சீரானது! பழைய அட்டவணைப்படி இயக்கம்!பிரதமா் மோடி இன்று வருகை: புதுச்சேரியில் போக்குவரத்து மாற்றம்பிரதமா் நரேந்திர மோடி இன்று சென்னை வருகைதென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஏப்ரல் 4 வரை மழைக்கு வாய்ப்புஇந்தியத் தொலைத்தொடா்பு சந்தையில் ஏா்டெல் முதலிடம்சாஃப் யு 20 கால்பந்து: இன்று இறுதியில் இந்தியா-வங்கதேசம் மோதல்முதல் வெற்றியை ஈட்டும் முனைப்பில் சிஎஸ்கே: பஞ்சாப்புடன் இன்று மோதல்பேரவைத் தோ்தல்: நீதிமன்றங்களுக்கு விடுமுறை அறிவிப்புஐபிஎல் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அபார வெற்றி - கொல்கத்தாவை வீழ்த்தியது
/

கோவை மாணவி தற்கொலை விவகாரம்: விசாரணை நிறைவு

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது.

News image
Updated On :16 நவம்பர் 2021, 9:17 am

DIN

கோவையில்  பள்ளி மாணவி தற்கொலை விவகாரத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகளின்  விசாரணை நிறைவு பெற்றது. இது தொடர்பாக விரைவில் அறிக்கை சமர்பிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கோவையில் 17 வயது மாணவி பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லையளித்து தற்கொலைக்கு தூண்டிய வழக்கில், கோவையில் உள்ள தனியார் பள்ளி இயற்பியல் ஆசிரியர் மிதுன் சக்ரவர்த்தி கைது செய்யப்பட்டார்.

மாணவி புகார் அளித்தும் போலிஸில் தகவல் சொல்லாமல் இருந்த அப்பள்ளியின் முதல்வர் மீரா ஜாக்சனையும் போலீஸார் போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

இதனைத் தொடர்ந்து பள்ளிக் கல்வித் துறை சார்பில் தொடர்ந்து பள்ளி நிர்வாகத்திடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் பள்ளி கல்வித் துறை விசாரணை திங்கள்கிழமையுடன் நிறைவான நிலையில், அறிக்கை தயார் செய்யும் பணி நடந்து வருகிறது.

 பள்ளி மாணவி தற்கொலை விவகாரம் தொடர்பாக தனியார் பள்ளி நிர்வாகத்திடம் மேற்கொண்ட விசாரணையின் அறிக்கையை பள்ளிக் கல்வித் துறையிடம் புதன்கிழமை சமர்ப்பிக்க உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.