மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது. காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்துவரும் மழையின் காரணமாக இன்று வியாழக்கிழமை காலை மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருந்தது.
அணையிலிருந்து வினாடிக்கு 45,000 கன அடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
இதையும் படிக்க | கையூட்டு அபாயம்: தரவரிசையில் 82-ஆவது இடத்தில் இந்தியா!
நீர் மின் நிலையங்கள் வழியாக வினாடிக்கு 22,000 கன அடி நீரும், உபரி நீர் போக்கி வழியாக வினாடிக்கு 23,000 கன அடி நீரும் திறக்கப்பட்டு வருகிறது.
அணையின் நீர்மட்டம் 120.10 அடியாக உள்ளது. அணையின் நீர் இருப்பு 93.63 டி.எம்.சி. ஆக இருந்தது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு வினாடிக்கு 500 கன அடிவீதம் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது.
மழையளவு: 1.40 மி.மீட்டராக பதிவாகியுள்ளது.