ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

முதல்வர் ஸ்டாலினுடன் மத்தியக் குழு ஆலோசனை

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

News image
Updated On :24 நவம்பர் 2021, 8:47 am

DIN

தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளை பார்வையிட்ட மத்தியக் குழுவினர் முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை, வெள்ளம் காரணமாக ஏற்பட்ட சேதங்களைப் பாா்வையிட மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலா் ராஜீவ் ஷா்மா தலைமையில் 7 போ் கொண்ட குழு, கடந்த ஞாயிற்றுக்கிழமை சென்னை வந்தடைந்தது.

இதையடுத்து, இரண்டு குழுக்களாக பிரிந்து கடந்த இரண்டு நாள்களாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, நாகை, வேலூர் உள்ளிட்ட மழையால் பாதிக்கப்பட்ட பல்வேறு மாவட்டங்களில் ஆய்வு நடத்தியது.

இந்நிலையில் ஆய்வை முடித்துள்ள மத்திய குழுவினா், சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வா் ஸ்டாலினை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார்கள். இந்த ஆலோசனையில் தமிழகத்திற்கு தேவையான நிதியை உடனடியாக விடுவிக்க முதல்வர் வலியுறுத்த வாய்ப்புள்ளது.

ஏற்கனவே தமிழக அரசு தரப்பில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேரில் சந்தித்து வெள்ள பாதிப்புகளை சீரமைக்க ரூ. 2,079 கோடி நிதி கேட்டு எம்.பி. டி.ஆர்.பாலு வலியுறுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.